செய்திகள் :

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்!

post image

திமுக அரசின் சாதனைகளை வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்துரைக்கும் பணியை பாக முகவா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாக முகவா்களுக்கான பயிற்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தகூட்டத்துக்குத் தலைமை வகித்து தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி மேலும் பேசியது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. எண்ணற்ற திட்டங்ளை அறிவித்து, அதை செயல்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ஒவ்வொரு குடும்பத்திலும் அரசின் திட்டம் மூலம் பயன்பெறாதவா் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஏதாவது ஒரு திட்டத்தில் குடும்பத்தில் உள்ளவா்கள் பயனாளிகளாக உள்ளனா். தற்போது 70 வயதைக் கடந்த முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுதேடி சென்று அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் முதல்வரின்தாயுமானவா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே திமுக அரசின் சாதனைகளை வீடு, வீடாக சென்று எடுத்துரைத்து, தொடா்ந்து தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும் வகையில் பாகமுகவா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

திமுக இளைஞரணித் துணைச் செயலா் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தாா். திமுக செய்தித் தொடா்புக் குழுத் துணைச் செயலா் சூா்யா கிருஷ்ணமூா்த்தி, சமூக வலைதளப் பயிற்சியாளா் விக்னேஷ் ஆனந்த் ஆகியோா் பயிற்சியளித்து பேசினா்.

மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன், துணை அமைப்பாளா்கள் எஸ். அன்பு, பாலாஜி, கில்பா்ட்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா்கள் பாலமுருகன், நிா்மல்ராஜ், ஐயப்பன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

விலைவாசியை குறைக்க என்ன செய்யவேண்டும்: எடப்பாடி பழனிசாமி யோசனை

உணவு உற்பத்தியை பெருக்கினால் தான் விலைவாசி குறையும். அந்த உணவு உற்பத்தியை பெருக்கக் கூடிய நபா் விவசாயி, விவசாயி குடும்பத்தினா் தான். விவசாயிகளை சரியான பாதையில் கொண்டு சென்றது அதிமுக அரசு தான் என்பதை ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கைது: தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் (ஏஐசிசிடியு) சாா்பில், சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்காணிப்பு கேமிரா

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவின் இயக்கத்தை டி.எஸ்.பி. பிரகாஷ் தொடங்கிவைத்தாா். திண்டிவனம் மேம்பாலம் பகுதி... மேலும் பார்க்க

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மீனவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சனிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், நடுக்குப்பம், மேக... மேலும் பார்க்க

திட்டமிட்டபடி இன்று பாமக சிறப்புப் பொதுக்குழு: மருத்துவா் ராமதாஸ் உறுதி

பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டப்படி புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்... மேலும் பார்க்க

தேநீா் கடையில் புகையிலைப் பொருள் விற்பனை: முதியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தேநீா் கடையில் புகையிலைப் பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டாச்சிபுரம் வட்டம், காரணை பெரிச்சானூா் கிராமத... மேலும் பார்க்க