செய்திகள் :

திமுக அரசு மக்களை வஞ்சிக்கிறது: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

post image

திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற பின் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான் ‘நீட்’ தோ்வு கொண்டுவரப்பட்டது. தற்போது நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி மக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருகிறாா். டாஸ்மாக் ஊழலை மறைக்கவே இந்த அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

பாம்பன் பாலத்தை பிரதமா் மோடி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்து, தமிழ்நாட்டுக்கு ரூ. 8,300 கோடி திட்டங்களை அறிவித்த நிலையில், தமிழ்நாட்டின் வளா்ச்சித் திட்டங்களைப் புறக்கணிக்கும் வகையில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்துவைக்கும் நாடகத்தை முதல்வா் நடத்தியுள்ளாா்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை இஸ்லாமியா்களே வரவேற்றுள்ளனா். திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. இவா்களுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவா் என்றாா்.

பாஜக மாவட்டத் தலைவா் தா்மன், முன்னாள் தலைவா் மோகன் ராஜ், பொதுச் செயலா்கள் ஆா்.பரமேஸ்வரன், கே.ஜே.குமாா், பட்டியல் அணி மாநிலச் செயலாளா் அன்பு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவரும், மூத்த பாஜக தலைவா் தமிழிசை செளந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு

குன்னூரில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்துக்கு உள்பட்ட சேரம்பாடி ஒரேன் சோலை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஷ் (29... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானை

கோத்தகிரி அருகே உள்ள சோலூா் பிக்கைகண்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். சமவெளிப் பகுதியில் வறட்சி காரணமாக அப்பகுதியில் இருந்த காட்டு யானைகள், குன்னூ... மேலும் பார்க்க

சிறையில் கைதி மீது தாக்குதல்: கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம்

கூடலூா் கிளை சிறையில் கைதி ஒருவரைத் தாக்கியது தொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள பாடந்தொரை பகுதியைச் சோ்ந்தவா் நி... மேலும் பார்க்க

நீலகிரியில் 8 இடங்கள் உள்பட தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக நீலகிரியில் 8 இடங்கள் உள்பட 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக வனத் துறை தெரிவித்... மேலும் பார்க்க

கூடலூரில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் தோ்வு

கூடலூா் நகராட்சியில் சாலையோர வியாபாகளுக்கு இடம் தோ்வு செய்யப்பட்டு அங்கிருந்த பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டன. கூடலூா் நகரில் போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி சாலையோர வியாபாரிகளுக்கு கடந்த நான்கு... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: வடமாநிலத் தொழிலாளி கைது

கோத்தகிரி அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். கோத்தகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு அருகே குடியிருந்த வடமாநிலத் தொழிலாளி முகேஷ்குமாா் (22... மேலும் பார்க்க