செய்திகள் :

"திமுக அரசை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை; இனியும் பேசமாட்டேன்" - அறிவாலயத்தில் வைகோ பாசமழை

post image

'அறிவாலயத்தில் வைகோ'

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசியிருந்தார்.

திமுக - மதிமுக கூட்டணியில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வைகோ பேசியிருக்கிறார்.

வைகோ
வைகோ

'பத்திரிகையாளர் சந்திப்பு'

வைகோ பேசியதாவது, "ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். இந்த திமுக அரசுக்கு எதிராக எந்த பிரச்னையிலும் நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை, பேசவும் மாட்டேன்.

திமுகவுக்குப் பக்கபலமாக இருப்பேன் எனக் கலைஞரின் இறுதி மூச்சுக்குச் சில நாட்களுக்கு முன்பு அவரிடம் கூறினேன். அதை நேற்று கூட மேடையில் பேசியிருந்தேன் என முதல்வரிடம் கூறினேன்.

இந்துத்துவ சனாதன சக்திகள், திராவிட கொள்கைகளைத் தகர்க்கலாம் என நினைத்தால், இமயமலையைக் கூட அசைக்கலாம் திராவிட கொள்கைகளை ஒன்றும் செய்ய முடியாது.

திராவிட இயக்கங்களின் லட்சியங்களும் கொள்கைகளும்தான் என் நரம்பில் ஓடும் குருதி ஓட்டமாக இருக்கின்றன. வருகிற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையாக வென்று ஆட்சியைப் பிடிக்கும்.

வைகோ
வைகோ

கூட்டணி ஆட்சி என்பது எங்களின் நோக்கம் அல்ல. கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எங்களின் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்" என்றார்.

மதிமுகவின் பொதுக்குழுவில் வருகிற தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

பாமக: "அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு; என் மனது வேதனைப்படும் அளவுக்கு..." - ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க

"டார்ச்சர் செய்றாங்க... என் சாவுக்கு திமுக-வினர் காரணம்" - ஆடியோ வெளியிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை

திருப்பூர் மாவட்டம், குண்டடம் மேற்கு ஒன்றியத்தின் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக இருந்தவர் செல்வானந்தம். இவரது மனைவி முத்துபிரியா நவநாரி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார்.திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

மிஸ்டர் கழுகு: சீனியரை மாற்ற விரும்பாத தலைமை.. டு மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய அண்ணன்!

ஆட்டம் காட்டும் மேலிட உறவுப்புள்ளி!சீனியரை மாற்ற விரும்பாத தலைமை...சூரியக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சீனியரை மாற்றும் எண்ணத்தில் முதன்மையானவர் இல்லையாம். ஆனாலும், ‘அவர் மாற்றப்பட உள்ளார... மேலும் பார்க்க

TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imperfect Show 2.7.2025

* தலைமைச் செயலக அதிகாரி கொடுத்த அழுத்தம் தான் தனிப்படை விசாரிக்கக் காரணமா?* காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்* "SORRY தான் ப... மேலும் பார்க்க

`Ajithkumar lockup death-ல நிகிதா பின்னால் இருப்பது யார்?' Piyus Manush அட்டாக்!

அதிரவைத்த சிவகங்கை சம்பவம். அஜித் குமாருக்கு நடந்த சித்ரவதைகள். இதில் கைது செய்யப்பட்ட ஐந்து காவலர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல அவர்களோடு பின்னணியில் இருக்கும் உயர் அதிகாரிகளும், குறிப்பாக நிகிதா-வின... மேலும் பார்க்க