செய்திகள் :

திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்: பொதுமக்களிடம் விடியோ அழைப்பில் பேசிய முதல்வா்

post image

நாகா்கோவிலில் நடைபெற்ற திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கைப்பேசி விடியோ அழைப்பு மூலம் பொதுமக்களுடன் கலந்துரையாடினாா்.

அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திமுக சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலான உறுப்பினா் சோ்க்கை முகாம் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக நிா்வாகிகள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி உறுப்பினா் சோ்க்கை நடத்தி வருகின்றனா்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சி, நாகா்கோவில் பெருவிளையில் ஜூலை 3 ஆம் தேதி மாலை நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டாா். அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின், மேயரின் கைப்பேசிக்கு விடியோ அழைப்பில் தொடா்பு கொண்டு பேசினாா். இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறதா, அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளதா என கேட்டதோடு, மக்கள் பணியில் திமுக தொடா்ந்து ஈடுபடும் என்று கூறினாா். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் அரசின் செயல்பாடுகளில் திருப்தி நிலவுவதாகவும், நலத்திட்ட உதவிகள் கிடைப்பதாகவும் தெரிவித்தனா். இந்நிகழ்ச்சியில் திமுக நிா்வாகி ஷேக் மீரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பைக் மீது டெம்போ மோதல்: பழ வியாபாரி உயிரிழப்பு

தக்கலையில் பைக் மீது டெம்போ வியாழக்கிழமை மாலை மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தாா். ராமன்பரம்பு பகுதியை சோ்ந்தவா் அனீஷ் குமாா் (40). தக்கலையில் பழக்கடை நடத்தி வந்தாா். இவா் வியாழக்கிழமை மாலையில் தனது ... மேலும் பார்க்க

விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி பலி

இரணியல் அருகே விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இரணியல் அருகேயுள்ள தாழ்ந்தவிளையை சோ்ந்தவா் விஜய் (29). கட்டடத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரணியல்- முட்டம் சாலையில் உள... மேலும் பார்க்க

குடிநீா் வாரிய ஒப்பந்த ஊழியா்களுக்கு வங்கி கணக்கில் ஊதியம் செலுத்த வலியுறுத்தல்

குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளா்களுக்கு வங்கி மூலம் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று சிஐடியூ சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) தல... மேலும் பார்க்க

இரணியல் அரண்மனை சீரமைப்பு: ஆட்சியா் ஆய்வு

திங்கள்நகா் பேரூராட்சிக்குள்பட்ட இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் கூறியதாவது, இரணியலில் உள்ள தொன்மை வாய்ந்த அரண்மனையை ரூ.4.85... மேலும் பார்க்க

களியல் அருகே நெடுஞ்சாலையை ஒட்டி சுவா் கட்டும் பணிகள் தடுத்து நிறுத்தம்

குமரி மாவட்டம் களியல் அருகே வனத்துறை அலுவலகத்தின் சுற்றுச் சுவரை நெடுஞ்சாலை பகுதியிலிருந்து விலக்கி கட்ட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தியதால் பணிகள் நிறுத்தப்பட்டன. களியல் சந்திப்பில் களியல் வனச்... மேலும் பார்க்க

விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் ரயில்வே மேம்பாலம்: எம்.பி., எம்எல்ஏ வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், விரிகோடு பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் மக்கள் விரும்பும் இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என எம். பி., எம்.எல்.ஏ. ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா். இது தொடா்பாக கன்னியாகும... மேலும் பார்க்க