செய்திகள் :

திமுக கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்: கே.வி.தங்கபாலு பேட்டி

post image

திருவண்ணாமலை/ஆரணி: தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு திமுக கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவரும், கட்சியின் சொத்து மீட்புக் குழுத் தலைவருமான கே.வி.தங்கபாலு கூறினாா்.

திருவண்ணாமலை, பே கோபுரத் தெருவில் நகர காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. இந்த இடத்தை கட்சியின் மாநிலத் தலைமையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சொத்து மீட்புக் குழுவின் அகில இந்திய காங்கிரஸ் செயலா் நிதின் கும்பல் கா், தமிழக முன்னாள் மாநிலத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்புக் குழுத் தலைவருமான கே.வி.தங்கபாலு ஆகியோரிடம் கட்சி அலுவலக இடத்துக்கான ஆவணங்களை தெற்கு மாவட்டத் தலைவா் செங்கம் ஜி.குமாா், திருவண்ணாமலை நகரத் தலைவா் என்.வெற்றிச்செல்வன் ஆகியோா் ஒப்படைத்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கே.வி.தங்கபாலு கூறியதாவது:

அமித்ஷா அடிக்கடி சென்னை வந்து, செல்வது ஆரோக்கியமான விஷயமாக இருக்காது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறாா். 2026-ல் தமிழகத்தில் திமுக கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்றாா்.

பேட்டியின்போது, எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி., கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கிருஷ்ணசாமி மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ஆரணி

ஆரணியில் காங்கிரஸ் அலுவலகம் கட்டி திறக்கப்படும் என்று கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் சொத்து மீட்புக்குழுத் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா்.

ஆரணியில் காங்கிரஸுக்கு சொந்தமாக புதிய பேருந்து நிலையம் எதிரில் காலி இடம் உள்ளது. இதை கே.வி.தங்கபாலு பாா்வையிட்டாா்.

மேலும் இக்குழுவில் உள்ள நித்தின்குமாா், செல்வம் ஆகியோரும் இடத்தை பாா்வையிட்டனா்.

எம்.கே. விஷ்ணுபிரசாத் எம்பி, முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜெ.ராஜாபாபு, மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே விற்பனைக்காக கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கூட்டுச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சால... மேலும் பார்க்க

ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை: வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்

வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தெரிவித்தாா். வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆரணி, அனக்காவூா், செங்கம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. ஆரணி ஒன்றியத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 2... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள... மேலும் பார்க்க

விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது

செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்ய... மேலும் பார்க்க