செய்திகள் :

"திமுக கூட்டணி, சூட்கேஸ் கூட்டணி; கொள்கைக் கூட்டணி கிடையாது" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

post image

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் புதூர் கிராமத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, "100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்திக் கொடுப்போம், ஒரு நாள் ஊதியமாக 350 ரூபாய் தருவோம் என தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னது. இப்போது மத்திய அரசு இரண்டு மாதமாக பணம் வழங்கவில்லை என பழி போடுகிறார்கள். கார் ரேஸ், கடலில் பேனா, ஜல்லிக்கட்டு அரங்கம் என பணத்தை வீண் செலவு செய்பவர்கள், அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கலாம் அல்லவா?

செல்லூர் ராஜூ

இப்போது 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக போராட்டம் நடத்த தொடங்கியுள்ளது. அதில் 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் மக்களை கட்டாயப்படுத்தி பங்கேற்கச் செய்கிறார்கள்.

அதிமுக ஆட்சி காலத்தில் நூறு கோடி, இருநூறு கோடி நிதியில் மக்களுக்கு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம், அதிமுக ஆட்சியில் நான்காண்டுகளில் மட்டும் மதுரைக்கு 8000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். ஆனால், இப்போது ஒரு அமைச்சர், நகரில் ஒரு சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையைக்கூட பகுதி பகுதியாக செய்கிறார்.

`எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுங்கள்' என முதலமைச்சர் சொல்வது, ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட்ட கதையாக உள்ளது. முதலமைச்சர் ஏன் எங்களைப்பற்றி பேசுகிறார்? திமுக-வினர் அதிமுக மீது கரிசனம் காட்டுவது ஏமாற்று வேலை.

திமுக கூட்டணியில் உள்ளவர்கள் திமுக குறித்துத் தவறாகப் பேசினால், உடனே சூட்கேஸை எடுத்துக்கொண்டு கூட்டணிக்கட்சியினரிடம் செல்கிறார்கள். இது கொள்கைக் கூட்டணி அல்ல, சூட்கேஸ் கூட்டணி போலதான் உள்ளது.

செல்லூர் ராஜூ - விஜய்

நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும் மக்களோடு மக்களாக இருக்கின்றோம் என்பது தம்பி விஜய்க்குத் தெரியும். அதனால் தான் அவர் எங்களை விமர்சிக்கவில்லை. திமுக எப்படி வேஷம் போடுகிறது என்று நாங்கள் சொல்வதைத்தான் அவரும் சொல்லியுள்ளார். எதிரியாக இருந்தாலும் பேசுவதுதானே தமிழ்நாட்டின் கலாசாரம். நான்கூட வரும் வழியில் திமுக-வினரைச் சந்தித்து பேசினேன். நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்காரர் மதுரையில் பிறந்தவர்தானே?அவரைச் சந்திப்பதில் என்ன தவறு? செங்கோட்டையன் எதார்த்தமாகவும், தற்செயலாகவும் சந்தித்து இருப்பார். அதிமுக தலைமையில்தான் 2026-ல் கூட்டணி அமையும், இதனை எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார்" என்றார்.

Waqf Bill: "இஸ்லாமியர் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி" - நாடாளுமன்றத்தில் ஆ.ராசா பேச்சு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வக்ஃப் சட்டத் திருத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருந்த திமுக எம்.பி ஆ.ராசா, சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்ட... மேலும் பார்க்க

'அவரைக் கூப்பிடாதீங்க'னு எல்லார்கிட்டயும் சொல்லியிருக்காராம்’ - தாடி பாலாஜி vs தவெக பஞ்சாயத்து

ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்தவர் நடிகர் தாடி பாலாஜி. விஜய் தமிழகவெற்றி கழகத்தைத் தொடங்கியதும்,அதில்சேர ஆர்வம் காட்டி வந்தார். கள்ளக்குறிச்சியில் நடந்த தவெக-வின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டார்.... மேலும் பார்க்க

`என் சிறுநீரகம் ரூ.75000, கல்லீரல் ரூ.90000'- கடனை அடைக்க உறுப்புகளை விற்கப்போவதாக விவசாயி போராட்டம்

மகாராஷ்டிராவில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். நாட்டிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் கடன் தள்ள... மேலும் பார்க்க

Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வக்ஃப் சட்டதிருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஓரணியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சட்டதிருத்த மசோதாவ... மேலும் பார்க்க

Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா காட்டம்

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், சூழலைப் பொறுத்து கூடுதல் நேரம் விவாதிக்கப்படும் என்றும்... மேலும் பார்க்க

கச்சத்தீவு : ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்... ஆனாலும் அனல் பறந்த விவாதம் - நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத்தில் நெடுநாள் பிரச்னையான கச்சத்தீவு விவகாரத்தில் முதலமைச்சரின் தனித் தீர்மானம் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானதுக்கு பாஜக சார்பில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்து... மேலும் பார்க்க