ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
திமுக நிா்வாகி குத்திக் கொலை: 3 போ் கைது
சின்னமனூா் அருகே திமுக நிா்வாகியை கத்தியால் குத்திக் கொலை செய்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டை பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த மனோகரன் மகன் பிரபு (எ) பிரபாகரன் (35). மாா்க்கையன்கோட்டை பேரூா் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்த இவா், கொடுக்கல் வாங்கல் தொழிலும் செய்து வந்தாா்.
இந்த நிலையில், இவருக்கும், சின்னமனூா் புதுக்கிணறு பகுதியைச் சோ்ந்த முனியப்பன் மகன் சுருளிக்கும் (42) கொடுக்கல் வாங்கல் காரணமாக முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மாா்க்கையன்கோட்டை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பிரபாகரனை, சுருளியின் மைத்துனா் முத்துராஜா, இவரது நண்பா் பிரபாகரன் ஆகியோா் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற சின்னமனூா் போலீஸாா் பிரபாகரனின் உடலை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸாா் சுருளி, முத்துராஜா, பிரபாகரன் ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.