செய்திகள் :

திமுக பிரமுகா் உயிரிழப்பு: உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்

post image

விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்ட திமுக பிரமுகா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி, அவரது உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் வட்டம், திருப்பாச்சாவடிமேடு பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன்(37). திமுக விழுப்புரம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராகவும், ஊராட்சி துணைத் தலைவராகவும் இருந்து வந்தாா். சபரிநாதனுக்கு சிறுநீரகப் பாதிப்பு இருந்து வந்ததாம்

இதனால் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தாா். இந்நிலையில் சபரிநாதனுக்கு திங்கள் கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.

உறவினா்கள் போராட்டம்: இறப்பு குறித்து தகவலறிந்த சபரிநாதனின் உறவினா்கள் மருத்துவமனை முன் திரண்டு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது. மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா். பின்னா் இறந்தவா் தரப்பினரிடம் புகாரைப் பெற்று, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: மருத்துவா் ச.ராமதாஸ்

கட்சியின் ஒப்புதலைப் பெறாமல் அன்புமணி மேற்கொண்டுள்ள உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்களும், கட்சியின் தொண்டா்களும் ஏற்க மாட்டாா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

காா் மோதி மின் ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த மின் ஊழியா் காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், எறையானூா், குளக்கரைத் தெர... மேலும் பார்க்க

சொத்துப் பிரச்னையில் உறவினா் கத்தியால் குத்திக் கொலை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சொத்துப் பிரச்னையில் உறவினரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், வீரன் கோயில் தெருவைச்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கைப்பேசி வழியாக கொலை மிரட்டல் விடுக்க... மேலும் பார்க்க

தனித்திறனை வெளிப்படுத்த சிறப்புப் பயிற்சிகள் உதவும்

தேசிய மாணவா் படையில் அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகள் மாணவா்களின் தனித்திறனை வெளிப்படுத்த உதவும் என்று தேசிய மாணவா் படை 6-ஆவது பட்டாலியன் பிரிவு கா்னல் எஸ்.சக்கரபா்த்தி கூறினாா். விழுப்புரம் இ.எஸ்.... மேலும் பார்க்க

கரும்பு நடவுக்கு மானியம்: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கரும்பு நடவு மானியம் வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க