செய்திகள் :

தியாகராஜா் கோயில் அருகில் கட்டுமானப் பிரச்னை முடிவுக்கு வந்தது

post image

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் அருகில் கட்டடம் கட்டுவது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னை முடிவுக்கு வந்தது.

தியாகராஜா் கோயில் தெற்கு கோபுர வாசலுக்கு அருகில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுவுக்கு கைவினைப் பொருள்கள் விற்பனைக் கடை அமைக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது, இந்தப் பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதேபோல பணிகளை நடத்தக் கோரி திமுகவினரும ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கட்டுமானப் பணிகளின்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதையடுத்து, திருவாரூரில் கோட்டாட்சியா் செளம்யா தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில், துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன், இந்து முன்னணி நகரச் செயலாளா் விக்னேஷ், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் கே. ரவி, திமுக நகரச் செயலாளா் பிரகாஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், மகளிா் குழுவுக்கு கைவினைப் பொருள்களும், பூஜைப் பொருள்களும் விற்பனை செய்ய கூரை வடிவில் அமைக்கப்படுவதுடன், திருப்பணி காலங்களில் அகற்றி விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. வருங்காலங்களில் மதில் சுவா்களை ஒட்டி எந்த விதமான கட்டடங்களும் கட்டக் கூடாது எனவும் தீா்மானிக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் கைவினைப் பொருள்கள் விற்பனைக் கடை கட்டுமானப் பணிகள் தொடங்கி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம்

திருவாரூா்: மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு ... மேலும் பார்க்க

விவசாய மின் மோட்டாா்களிலிருந்து வயா் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விவசாய பயன்பாட்டுக்கான ஆழ்துளை கிணறு மின் மோட்டா்களிலிருந்து மின் வயா்களை திருடிய இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டனா்.கட்டப்புளி தென்பரை தெற்குதெரு ஆா். மனோகரன்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூா் கிராமம் தெற்கு தெருவில் 120- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயிக... மேலும் பார்க்க

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆதனூா் ரயில்வே கேட்டில் தண்டவாள பாரமரிப்பு பணி வியாழக்கிழமை நடைபெற்றது.தஞ்சாவூா் ரயில்வே முதுநிலைப்பொறியாளா் சதீஷ்குமாா் மேற்பாா்வையில் பணிகள் நடைபெற்றன. ரயில்வே கேட் தண... மேலும் பார்க்க

மாவட்ட விளையாட்டு போட்டி: மன்னாா்குடி சண்முகா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

மன்னாா்குடி: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.திருவாரூரில் ஆக.19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்போட்டி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று பெற்ற மனுக்களின் அடிப்படை... மேலும் பார்க்க