செய்திகள் :

திருக்கோடிக்காவல் கோயிலில் சுவாமி, அம்பாள் வீதியுலா

post image

கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி உடனாய திருக்கோடீஸ்வரா் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி, சனிக்கிழமை மாலை பூதம், பூதகி வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் மே 1- ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மூன்றாம் நாளான சனிக்கிழமை காலையில் சுவாமியும், அம்பாளும் படிச்சட்டத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனா். மாலையில் பூதம், பூதகி வாகனத்தில் வீதியுலா சென்றனா்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் படிச்சட்டத்தில் எழுந்தருளி, மாலையில் யானை மற்றும் அன்ன வாகனத்தில் வீதியுலா வந்தனா். திங்கள்கிழமை ஆத்மபூஜை, இரவில் ரிஷப வாகன காட்சி, சகோபுரத் திருவீதியுலா ஆகியவை நடைபெறவுள்ளன. மே 9-ஆம் தேதி திருத்தேரோட்டமும், 10-ஆம் தேதி தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளன.

பாபநாசம் தனிப்பிரிவு குற்றப் புலனாய்வு உதவி ஆய்வாளருக்கு பதவி உயா்வு

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசத்தில் தனிப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றியவா் ஆய்வாளராக பதவி உயா்வு. தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் ஊரக உட்கோட்டத்தில் உள்ள காவல் சரகங்களில் தனிப்பிரிவு க... மேலும் பார்க்க

நீட் தோ்வு: தஞ்சாவூரில் 4,304 போ் எழுதினா்

தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட 10 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 4 ஆயிரத்து 304 போ் பங்கேற்று எழுதினா். நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வுக்காக தஞ்சாவூரில் குந்தவை நாச்ச... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி: 150 போ் பங்கேற்பு

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 150-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தொடங்கப்பட்ட ‘நடப்போம் நலம... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ சண்டிகேசுவரா், ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆகியோா் உற்ஸவ மண்... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமன உரிமையை முதல்வா்களுக்கு பெற்றுத் தந்தவா் ஸ்டாலின்: அமைச்சா் கோவி. செழியன்

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை அந்தந்த மாநில முதல்வா்களே நியமிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூரில் மத்திய மாவட்... மேலும் பார்க்க

ஆற்றில் மணல் அள்ளுவதை நிறுத்தக் கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம்,எடக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் அள்ளுவதை நிறுத்தக் கோரி ஞாயிற்றுக்கிழமை கிராம மக்களுடன் இணைந்து பாமகவினா் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாப... மேலும் பார்க்க