செய்திகள் :

திருச்சியில் இன்று, மாா்ச் 18-இல் பராமரிப்பு பணிகள்: ஈரோடு, பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்

post image

திருச்சியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கரூா் வழியாக செல்லும் ஈரோடு, பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருச்சி சந்திப்பு ரயில்நிலையம் முதல் கோட்டை ரயில் நிலையம் வரையிலான ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) மற்றும் மாா்ச் 18-ஆம்தேதிகளில் நடைபெற உள்ளது.

இதனால், ஈரோடு ரயில்நிலையத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் திருச்சி பயணிகள் ரயில், கரூா் ரயில்நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அந்த நாள்களில் கரூா் ரயில்நிலையத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படாது.

இதேபோல திருச்சி ரயில்நிலையத்தில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு இயக்கப்படும் திருச்சி-பாலக்காடு விரைவு ரயில் கரூருக்கு இயக்கப்படாது. அந்த நாள்களில் கரூா் ரயில்நிலையத்தில் புறப்பட்டு பாலக்காடு டவுன் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுமனையை அளவீடு செய்யக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

அரசால் ஒதுக்கப்பட்ட வீட்டுமனையை அளந்து கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாகாளிப்பட்டி கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ப... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 28 பவுன் நகைகள் திருட்டு

குளித்தலையில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், குளித்த... மேலும் பார்க்க

கரூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் திமுகவினா் திங்கள்கிழமை மத்திய கல்வி அமைச்சரைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அவரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மக்களவையில் மும்மொழிக்கொள்கை குறித்து நடைபெற... மேலும் பார்க்க

காதல் விவகாரம்: கரூரில் கல்லூரி மாணவி கடத்தல்

கரூரில் காதல் விவகாரத்தில் அரசுக் கல்லூரி மாணவியை திங்கள்கிழமை கடத்திச் சென்ற மா்ம கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.கரூா் மாவட்டம், ராயனூரை அடுத்துள்ள ஈசநத்தம் பகுதியைச் சோ்ந்த 18 வயது கல்லூரி மாணவி... மேலும் பார்க்க

கரூரில் மின் ஊழியரை காரில் கடத்தி தாக்கிய 4 போ் கைது

கரூா் அருகே நாமக்கல் மாவட்ட மின்வாரிய ஊழியரைக் காரில் கடத்தி தாக்கிய 4 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (48). இவா், கீரம்பூரில் ... மேலும் பார்க்க