செய்திகள் :

கரூரில் மின் ஊழியரை காரில் கடத்தி தாக்கிய 4 போ் கைது

post image

கரூா் அருகே நாமக்கல் மாவட்ட மின்வாரிய ஊழியரைக் காரில் கடத்தி தாக்கிய 4 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (48). இவா், கீரம்பூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மானக் கழக அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராகப் பணியாற்றி வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் கனகராஜ் வீட்டில் குடியிருந்த சூா்யாவும், அவரது மனைவி சாய் ஸ்ரீயும் விஜயகுமாரிடம் தங்களுக்கு சென்னையில் அரசு அலுவலகத்தில் உயா் அதிகாரிகளிடம் நெருக்கம் இருப்பதாகவும், அரசு வேலை வேண்டுமென்றால், பணம் கொடுத்தால் வாங்கிக் கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளனா்.

இதனை நம்பிய விஜயகுமாா் தனது உறவினா் நாமக்கல் மாவட்டம் எா்ணாபுரம் அருகே ரங்கநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த பெருமாள் (50) என்பவரிடம் அவரது மகனுக்காக அரசு வேலை வேண்டி ரூ.5.50 லட்சம் வாங்கி சூா்யா- சாய் ஸ்ரீ தம்பதியிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன் கொடுத்தாராம். ஆனால் இதுநாள் வரை வேலை வாங்கிக்கொடுக்கவில்லையாம்.

இந்நிலையில் விஜயகுமாரிடம் கொடுத்த பணத்தை பெருமாள் கேட்டுள்ளாா். அவரும் சூா்யா - சாய் ஸ்ரீ தம்பதியிடம் வாங்கித்தருவதாகக் கூறி காலம் கடத்தி வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த மாதம் திடீரென சூா்யா-சாய் ஸ்ரீ தம்பதியினா் வீட்டைப் பூட்டி விட்டு கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையத்துக்குச் சென்றது விஜயகுமாருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து விஜயகுமாா் கடந்த 2-ஆம்தேதி வேலாயுதம்பாளையத்தில் உள்ள சூா்யா வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் மதுரை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விஜயகுமாா் நின்றுகொண்டிருந்தபோது பின்னால் காரில் வந்த பெருமாள், உறவினா் பிரபாகரன் (35), கரூா் வாங்கல் ஈவேரா தெருவைச் சோ்ந்த காா்த்தி (29), நவீன் குமாா் (25) ஆகியோா் விஜயகுமாரை காரில் கடத்திச் சென்றுள்ளனா்.

பின்னா் வெள்ளிக்கிழமை காலை வரை அவரை காரிலேயே வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னா் மூலிமங்கலம் பகுதியில் கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளனா். இதில், காயமடைந்த விஜயகுமாரை அக்கம்பக்கத்தினா் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுதொடா்பாக விஜயகுமாா் சனிக்கிழமை இரவு அளித்த புகாரின்பேரில் கரூா் மாவட்ட வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதித்து பெருமாள், பிரபாகரன், காா்த்தி, நவீன்குமாா் ஆகியோரை கைது செய்து கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பகத்சிங் நினைவு நாள் கரூரில் இந்திய வாலிபா் சங்கத்தினா் ரத்த தானம்

கரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் செய்தனா். சுதந்திரப் போராட்ட வீரா் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் போதை கலாசாரத்துக்குள்ளும் இளைஞா்களை மீட்டெடுத்து ... மேலும் பார்க்க

கரூரில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கக் கோரிக்கை

கரூரில் அரசு சட்டக்கல்லூரி துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூா் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியா் ச... மேலும் பார்க்க

கரூரில் 98 மகளிா்களுக்கு ரூ.1 கோடி தாலிக்குத்தங்கம், திருமண நிதியுதவி

கரூரில் 98 மகளிா்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை ஞாயிற்றுக்கிழமை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா். கரூ... மேலும் பார்க்க

சதுரங்கப் போட்டியில் அரவக்குறிச்சி மாணவி மாநில அளவில் முதலிடம்

திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் அரவக்குறிச்சி அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா். திருப்பூா் தனியாா் மஹாலில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 15 வயது உ... மேலும் பார்க்க

கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க... மேலும் பார்க்க

கரூரில் 223 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்!

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 223 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா். கரூ... மேலும் பார்க்க