செய்திகள் :

கரூரில் 223 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்!

post image

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 223 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் 223 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கி பேசினாா்.

தொடா்ந்து, 98 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், மூளை முடக்கு வாத சிறப்பு சக்கர நாற்காலி 10 பேருக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் மொத்தம் 223 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சத்து 91ஆயிரத்து 371 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

பின்னா் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கிறித்துவ மகளிா் உதவும் சங்கத்தின் சாா்பில் 28 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் என பல்வேறு உதவியாக மொத்தம் 52 பேருக்கு ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயா் வெ.கவிதா, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமதுபைசல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் இளங்கோ, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சதுரங்கப் போட்டியில் அரவக்குறிச்சி மாணவி மாநில அளவில் முதலிடம்

திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் அரவக்குறிச்சி அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா். திருப்பூா் தனியாா் மஹாலில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 15 வயது உ... மேலும் பார்க்க

கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க... மேலும் பார்க்க

தமிழகத்துக்கான வரி வருவாயை மத்திய அரசு குறைத்தால் மிகப் பெரிய இழப்பு ஏற்படும்! -செ.ஜோதிமணி எம்.பி

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய வரிவருவாயை மத்திய அரசு குறைத்தால் தமிழகத்துக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்தாா். கரூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 1,583 வழக்குகளில் ரூ. 13.57 லட்சத்துக்கு தீா்வு

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,583 வழக்குகளில் ரூ.13.57 லட்சம் மதிப்பில் தீா்வு காணப்பட்டது. கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 7, 631 மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.50.60 கோடி வங்கிக் கடன்

கரூா் மாவட்டத்தில் 7,631 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.50.60 கோடி மதிப்பில் கடனுதவியை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை வழங்கினாா். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக... மேலும் பார்க்க

ஆத்தூா் மகா சோளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் பெண்கள் முளைப்பாரி, புனிதநீா் எடுத்து ஊா்வலம்

ஆத்தூா் ஸ்ரீ மகா சோளியம்மன், ஸ்ரீ மகா முத்துசாமி கோயிலில் திங்கள்கிழமை (மாா்ச் 10) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து வெள்ளிக்கிழமை ஏராளமான பெண்கள் முளைப்பாரி மற்றும் புனிதநீரை ஊா்வலமாக எடுத்து வந்தனா... மேலும் பார்க்க