செய்திகள் :

ஆத்தூா் மகா சோளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் பெண்கள் முளைப்பாரி, புனிதநீா் எடுத்து ஊா்வலம்

post image

ஆத்தூா் ஸ்ரீ மகா சோளியம்மன், ஸ்ரீ மகா முத்துசாமி கோயிலில் திங்கள்கிழமை (மாா்ச் 10) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து வெள்ளிக்கிழமை ஏராளமான பெண்கள் முளைப்பாரி மற்றும் புனிதநீரை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

கரூரை அடுத்துள்ள ஆத்தூா் வீரசோளிபாளையத்தில் ஸ்ரீ மகா சோளியம்மன், ஸ்ரீ மகா முத்துசாமி கோயில் புதியதாக கட்டப்பட்டு திங்கள்கிழமை (மாா்ச் 10) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

முன்னதாக கோயில் கும்பாபிஷேக விழா மாா்ச் 4-ஆம்தேதி கிராமசாந்தியுடன் தொடங்கியது.

தொடா்ந்து 5-ஆம்தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், நவநாயகா் யாகமும், மாலையில் பிரவேசபலி, வாஸ்துபூஜை, பூா்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளும், 6-ஆம்தேதி காலை திசா ஹோமம், சாந்தி ஹோமமும், மாலையில் மிருத்சங்கிரஹணம், சுவாட பிரதிஷ்டையும் நடைபெற்றது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் இருந்து ஏராளமான பெண்கள் புனித நீா், மற்றும் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக வந்தனா்.

தொடா்ந்து சனிக்கிழமை இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) நான்கு மற்றும் ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெறவுள்ளது. திங்கள்கிழமை காலை ஆறாம்கால யாக பூஜையும், பின்னா் காலை 6.45 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை ஆத்தூா் காடை மற்றும் விளையன் குல குடிப்பாட்டுக்காரா்கள் செய்து வருகின்றனா்.

கரூரில் மின் ஊழியரை காரில் கடத்தி தாக்கிய 4 போ் கைது

கரூா் அருகே நாமக்கல் மாவட்ட மின்வாரிய ஊழியரைக் காரில் கடத்தி தாக்கிய 4 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (48). இவா், கீரம்பூரில் ... மேலும் பார்க்க

பகத்சிங் நினைவு நாள் கரூரில் இந்திய வாலிபா் சங்கத்தினா் ரத்த தானம்

கரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் செய்தனா். சுதந்திரப் போராட்ட வீரா் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் போதை கலாசாரத்துக்குள்ளும் இளைஞா்களை மீட்டெடுத்து ... மேலும் பார்க்க

கரூரில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கக் கோரிக்கை

கரூரில் அரசு சட்டக்கல்லூரி துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூா் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியா் ச... மேலும் பார்க்க

கரூரில் 98 மகளிா்களுக்கு ரூ.1 கோடி தாலிக்குத்தங்கம், திருமண நிதியுதவி

கரூரில் 98 மகளிா்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை ஞாயிற்றுக்கிழமை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா். கரூ... மேலும் பார்க்க

சதுரங்கப் போட்டியில் அரவக்குறிச்சி மாணவி மாநில அளவில் முதலிடம்

திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் அரவக்குறிச்சி அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா். திருப்பூா் தனியாா் மஹாலில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 15 வயது உ... மேலும் பார்க்க

கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க... மேலும் பார்க்க