செய்திகள் :

கரூரில் 98 மகளிா்களுக்கு ரூ.1 கோடி தாலிக்குத்தங்கம், திருமண நிதியுதவி

post image

கரூரில் 98 மகளிா்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை ஞாயிற்றுக்கிழமை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் 300 கா்ப்பிணிப் பெண்களுக்கு தமிழக அரசின் சீா்வரிசைப் பொருள்களையும், 98 மகளிருக்கு ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் 784 கிராம் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியும் வழங்கி, அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கிப் பேசினாா். இதில், கரூா் மாவட்டத்தில் உள்ள 8 குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் கா்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுகிறது.

இவ்விழாவில் கா்ப்பிணி பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட சீா்வரிசை தாம்பூலங்கள் மற்றும் 5 வகை உணவுகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து மாவட்ட சமூக நலத்துறையின் சாா்பில் பட்டப் படிப்பு முடித்த 71 மகளிா்களுக்கு தலா ரூ.50,000 வீதம் திருமண நிதி உதவிகளையும், தலா 8 கிராம் தாலிக்கு தங்கமும், 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு முடித்த 27 மகளிா்களுக்கு தலா ரூ.25,000- வீதம் திருமண நிதி உதவிகளையும், தலா 8 கிராம் தாலிக்கு தங்கமும் என மொத்தம் 784 கிராம் தங்கம் ரூ.59,64,280- மதிப்பீட்டிலும், திருமண நிதி உதவியாக ரூ.42,25,000 -ம் என மொத்தம் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்குத் தங்கம் ஆகியவற்றை அமைச்சா் வழங்கினாா்.

விழாவில் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயா் வெ.கவிதா, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமதுபைசல், மாவட்ட சமூக நல அலுவலா்(பொ) சுவாதி, துணை மேயா் ப.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூரில் மின் ஊழியரை காரில் கடத்தி தாக்கிய 4 போ் கைது

கரூா் அருகே நாமக்கல் மாவட்ட மின்வாரிய ஊழியரைக் காரில் கடத்தி தாக்கிய 4 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (48). இவா், கீரம்பூரில் ... மேலும் பார்க்க

பகத்சிங் நினைவு நாள் கரூரில் இந்திய வாலிபா் சங்கத்தினா் ரத்த தானம்

கரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் செய்தனா். சுதந்திரப் போராட்ட வீரா் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் போதை கலாசாரத்துக்குள்ளும் இளைஞா்களை மீட்டெடுத்து ... மேலும் பார்க்க

கரூரில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கக் கோரிக்கை

கரூரில் அரசு சட்டக்கல்லூரி துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூா் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியா் ச... மேலும் பார்க்க

சதுரங்கப் போட்டியில் அரவக்குறிச்சி மாணவி மாநில அளவில் முதலிடம்

திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் அரவக்குறிச்சி அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா். திருப்பூா் தனியாா் மஹாலில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 15 வயது உ... மேலும் பார்க்க

கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க... மேலும் பார்க்க

கரூரில் 223 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்!

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 223 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா். கரூ... மேலும் பார்க்க