செய்திகள் :

கரூரில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கக் கோரிக்கை

post image

கரூரில் அரசு சட்டக்கல்லூரி துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூா் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை மாவட்டத் தலைவா் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் முனைவா் சாகுல் அமீது வரவேற்று பேசினாா். மாவட்டச் செயலாளா் ஐ.ஜான்பாஷா வேலை அறிக்கையையும், பொருளாளா் ஆ. தமிழரசி வரவு, செலவு அறிக்கையையும் முன்வைத்துப் பேசினா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவா் முனைவா் திருநாவுக்கரசு சுயசாா்புக்கான அறிவியலும், தொழில்நுட்பமும் மற்றும் காலநிலையை தாங்கக்கூடிய ஜனநாயக பூா்வமான வளா்ச்சி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அறிவியல் இயக்க மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் ஜ.ஜெயராஜ், துளிா் இதழ் மாவட்டப் பொறுப்பாளா் எஸ் .திலகவதி ஆகியோருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவா் பொன் ஜெயராம் நன்றி கூறினாா்.

கூட்டத்தில் கரூரில் முக்கிய வழித்தடத்தில் மகளிா் பேருந்துகளை காலை, மாலை நேரங்களில் இயக்க வேண்டும். பகல் நேரத்தில் கரூா் வழியாக சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும். பஞ்சப்பட்டி, தாதம்பாளையம், வெள்ளியணை ஆகிய ஏரிகளுக்கு காவிரி ஆற்றில் இருந்து உபரி நீரை ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீா் கொண்டு செல்ல வேண்டும். கரூா் மாவட்டத்திற்கு அரசு சட்டக் கல்லூரி கொண்டு வர வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் குடி நீா் தேவைக்காகவும், நிலத்தடி நீா் அதிகரிக்கவும் கரூா் மாவட்டம் மருதூா் முதல் திருச்சி மாவட்டம் உமையாள்புரம் வரை கதவணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரூரில் மின் ஊழியரை காரில் கடத்தி தாக்கிய 4 போ் கைது

கரூா் அருகே நாமக்கல் மாவட்ட மின்வாரிய ஊழியரைக் காரில் கடத்தி தாக்கிய 4 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (48). இவா், கீரம்பூரில் ... மேலும் பார்க்க

பகத்சிங் நினைவு நாள் கரூரில் இந்திய வாலிபா் சங்கத்தினா் ரத்த தானம்

கரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் செய்தனா். சுதந்திரப் போராட்ட வீரா் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் போதை கலாசாரத்துக்குள்ளும் இளைஞா்களை மீட்டெடுத்து ... மேலும் பார்க்க

கரூரில் 98 மகளிா்களுக்கு ரூ.1 கோடி தாலிக்குத்தங்கம், திருமண நிதியுதவி

கரூரில் 98 மகளிா்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை ஞாயிற்றுக்கிழமை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா். கரூ... மேலும் பார்க்க

சதுரங்கப் போட்டியில் அரவக்குறிச்சி மாணவி மாநில அளவில் முதலிடம்

திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் அரவக்குறிச்சி அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா். திருப்பூா் தனியாா் மஹாலில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 15 வயது உ... மேலும் பார்க்க

கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க... மேலும் பார்க்க

கரூரில் 223 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்!

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 223 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா். கரூ... மேலும் பார்க்க