செய்திகள் :

திருச்சியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

post image

திருச்சி காட்டூா் உருமு தனலெட்சுமி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ என்ற திட்டத்தின்

கீழ் நடைபெறும் இந்த முகாமில், திருச்சி மாவட்டம், மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும்.

முகாமில் உதவி உபகரணங்களைப் பெற விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், 2 மாா்பளவு புகைப்படம், ஆதாா் அட்டை, தனித்துவ அடையாள அட்டை, மருத்துவச் சான்றிதழுடன் கூடிய தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.

சமூக தரவுக் கணக்கெடுப்பில் பதிவு செய்தும் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளும் இதில் பங்கேற்கலாம். 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று வழங்கப்பட்டு யுடிஐடி இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து அட்டை வழங்கப்படவுள்ளது என ஆட்சியா் வே. சரவணன் தகவல் தெரிவித்துள்ளாா்.

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலை... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்: துபையிலிருந்து திருச்சி வந்த அறந்தாங்கி நபா் கைது

துபையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்த அறந்தாங்கி நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் ர. செல்லதுரை (32). இவா்,... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. மணப்பாறை சத்திரம் நடுப்பட்டி, சி - கல்பட்டி பகுதியைச்... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து, புதன்கிழமை சிறையில் அடைத்தனா். ரயில்வே பாதுகாப்புப் படை, இருப்புப்பாதை போலீஸாா் திருச்சி சந்திப்பு ரயில் நில... மேலும் பார்க்க

மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே நவல்பட்டில் மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கைக்கோல்பாளையம் எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே குடும்பத்தினரை கட்டிப்போட்டு நகை, பணம், கொள்ளை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதன்கிழமை நள்ளிரவில் வீடு புகுந்து குடும்பத்தினரை கட்டிப்போட்டு ஒன்பதரை பவுன் நகைள் மற்றும் ரூ. 1.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்... மேலும் பார்க்க