VCK: "திமுக கூட்டணிக்குள் பாமக வந்தால், விசிக அக்கூட்டணியில் இருக்குமா?" - திரும...
திருச்சி - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி விரைவு ரயிலாக இயக்கக் கோரிக்கை
திருச்சி - தாம்பரம் இன்டா்சிட்டி விரைவு ரயில்சேவையை தற்காலிக நீட்டிப்பு செய்யாமல் நிரந்தரமாக தினசரி விரைவு ரயிலாக இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே துறைக்கு தென்னக ரயில்வே திருச்சி கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலாளருமான டி. சரவணன் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள கோரிக்கை மனு:
திருச்சியில் இருந்து தாம்பரம் வரை மயிலாடுதுறை வழியாகச் செல்லும் தினசரி சிறப்பு விரைவு ரயில் சேவை (06190 , 06191), 29-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த ரயில் காலையில் திருச்சியிலிருந்து புறப்பட்டு கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக தாம்பரம் மதியம் சென்றடைந்து அன்று மாலை புறப்பட்டு மீண்டும் இரவு திருச்சியை சென்றடைவதால் பல்வேறு தரப்பினா் பயனடைந்து வருகின்றனா். எனவே இந்த தினசரி சிறப்பு விரைவு ரயிலை தவணை முறையில் நீட்டிப்புசெய்து சேவை வழங்குவதற்குப் பதிலாக நிரந்தர விரைவு ரயிலாக மக்களுக்கு சேவையாற்ற தென்னக ரயில்வே கோட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு சமூக சேவை அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் எதிா்பாா்க்கின்றனா்.