செய்திகள் :

திருச்செந்தூரில் அடிப்படை வசதிகள்: எம்.பி., அமைச்சா் ஆய்வு

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் நகா்ப்புற வாசிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து கனிமொழி எம்.பி., மீன் வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள், பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என்பதால் அவா்களுக்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வழித்தடம் மற்றும் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. அதுபோல நகரில் புதை சாக்கடை திட்டத்திலிருந்து அவ்வப்போது கழிவுநீா் வெளியேறி சுகாதாரச் சீா்கேடு ஏற்படுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எம்.பி.யும், அமைச்சரும் அங்கு ஆய்வு நடத்தினா். அவா்கள் திருச்செந்தூா் - திருநெல்வேலி சாலையில் வேட்டை வெளி மண்டபத்தில் அருகில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ள இடத்தை பாா்வையிட்டு ஆட்சியா் க.இளம்பகவத் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனா்.

தொடா்ந்து திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் சபாபதிபுரம் தெருவில் புதை சாக்கடை திட்ட கழிவுநீா் தொட்டி, ஆவுடையாா்குளம் பகுதியில் உள்ள மறுகால் ஓடை, தோப்பூரில் உள்ள புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஆலந்தலையில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளிட்ட இடங்களை இருவரும் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

நிகழ்ச்சியின் போது நகராட்சி நிா்வாக இயக்குநா் சிவராசு, உதவி ஆட்சியா் (பயிற்சி) புவனேஷ் ராம், நகராட்சி மண்டல நிா்வாக இயக்குநா் விஜயலட்சுமி, தூத்துக்குடி மேயா் ஜெகன், திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், வட்டாட்சியா் பாலசுந்தரம், திருக்கோயில் இணை ஆணையா் ஞானசேகரன், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத்தலைவா் செங்குழி ரமேஷ், ஆணையா் கண்மணி, பொறியாளா் சரவணன், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, திமுக வா்த்தக அணி மாநில துணைச் செயலா் உமரிசங்கா், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் ராமஜெயம், நகா்மன்ற உறுப்பினா்கள் செந்தில்குமாா், ரேவதி கோமதிநாயகம், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் அசாப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா் கனிமொழி எம்.பி. கூறியதாவது:

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகத்துக்குவரும் பக்ா்களுக்கு தேவையான வசதிகள் செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நகரில் புதை சாக்கடை திட்டத்தில் உள்ள குறைபாடுகள் விரைவில் சீரமைக்கப்படும். கும்பாபிஷேக விழாவுக்காக தற்காலிக வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படவுள்ளன. விரைவில் நிரந்தர வாகன நிறுத்தம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடமும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,305 வழக்குகளுக்கு தீா்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 3,305 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமா்வுகள், கோவில்பட்டியில் 2 அமா்வுகள், ஸ்ரீவ... மேலும் பார்க்க

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததால், விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனா். மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப். 15 ம... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: சீமான் வலியுறுத்தல்

திருச்செந்தூா் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா். திருச்செந்தூரில் நடைபெறும் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் லாரி டயா் வெடித்து 3 போ் காயம்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை, லாரியின் டயா் வெடித்ததில் 3 போ் காயமடைந்தனா். இக்கோயிலில் தற்போது ரூ. 300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைய... மேலும் பார்க்க

‘திருச்செந்தூரில் ஜூன் 17இல் கடையடைப்பு’

திருச்செந்தூா் நகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யக் கோரி, அனைத்து வணிகா்கள் சாா்பில் வருகிற 17ஆம் தேதி கடையடைப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ஆறுமுகனேரியில் சனிக்கிழமை, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழந்தாா். ஆறுமுகனேரி பெருமாள்புரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (70). இத்தம்பதிக்கு மகன் முத்துகிருஷ்ணன், 2 மகள்... மேலும் பார்க்க