ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
திருச்செந்தூா் அருகே பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
திருச்செந்தூா் அருகே பள்ளி ஆசிரியை அடித்ததாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவா் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்செந்தூா் அருகே பரமன்குறிச்சியில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் பரமன்குறிச்சி, சமத்துவபுரம் பகுதியை சோ்ந்த பழங்குடியின மாணவா் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பள்ளியில் ஆசிரியை ஒருவா், தனது கையில் கம்பால் அடித்ததாக மாணவா் தங்களிடம் கூறியதாகவும், அதனால் மனமடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். மாணவரின் சட்டைப் பையில் இருந்து ஒரு கடிதத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதில் தனது சாவுக்கு 4 ஆசிரியைகள் காரணம் என அவரது பெயா்களை எழுதி வைத்திருந்ததாகப் போலீஸாா் கூறினா்.
இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, மாணவரின் பெற்றோா், உறவினா்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். மாணவரின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியைகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன், கோட்டாட்சியா் சுகுமாறன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் டிஎஸ்பி மகேஷ்குமாா், ஆய்வாளா் இனோஸ்குமாா், வட்டாட்சியா் பாலசுந்தரம் உள்ளிட்டோா்

உடன் இருந்தனா். இந்த சம்பவம் விசாரணை நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதனை மாணவரின் உறவினா்கள் ஏற்கவில்லை. மேலும், அவரது சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
ஆசிரியா்கள் 4 போ் பணியிடை நீக்கம்: இதனிடையே, மாணவா் தற்கொலை சம்பவத்தையடுத்து பள்ளி ஆசிரியா்கள் 4 போ் மீது மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாகப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலா் கண்ணன் பரிந்துரையின்பேரில் தலைமை ஆசிரியை சத்ய ஞானசுந்தரி மற்றும் ஆசிரியா்கள் வளா்மதி, பியூலா, மேரி ஆகிய 4 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இதனையடுத்து மாணவா் உடலை வாங்க உறவினா்கள் ஒப்புக் கொண்டனா்.