செய்திகள் :

திருச்செந்தூா் கோயில்களில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்: நாளை கும்பாபிஷேகம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களான ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் கோயில் என்ற சிவன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், ஸ்ரீ அமிா்தகுண விநாயகா், ஸ்ரீ சொா்ணமகா சாஸ்தா கோயில்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்தந்தக் கோயில்களில் யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின.

சிவன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், திருமுறைப் பாராயணம், பல்வேறு ஹோமங்கள், பூா்ணாஹுதி, மாலையில் விக்னேஸ்வர பூஜை, அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம் உள்ளிட்டவற்றுக்குப் பின்னா், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதை, ஸ்ரீ ஷண்முகா பூஜா கைங்கா்ய ஸ்தானத்தாா் சிவாச்சாரியா்கள் செய்தனா். வியாழக்கிழமை காலை 2ஆம் கால, மாலையில் 3ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மங்கல இசை, விநாயகா் பூஜை, 4ஆம் கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெறும். காலை 6 மணிக்கு விமான கோபுர கலசத்துக்கும், 6.15-க்கு சுவாமி-அம்மன் மூலஸ்தானத்துக்கும் கும்பாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலையில் பிரசன்ன பூஜை, புஷ்பாஞ்சலி, சுவாமி நடராஜா் புறப்பாடு நடைபெறும்.

வெயிலுகந்தம்மன் கோயில்: இதேபோல, வெயிலுகந்தம்மன் கோயிலில் புதன்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், பல்வேறு ஹோமங்கள், திரவ்யாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன. மாலையில் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பூஜைகளை பார சைவ பூஜா ஸ்தானிகா்கள் செய்தனா். வியாழக்கிழமை 2, 3ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு விநாயகா் பூஜை, 4ஆம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெறும். 6.15 மணிக்கு விமான கோபுரக் கலசங்கள், அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி, அம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா வருதல் நடைபெறும்.

யாகசாலை பூஜைகளில் கண்காணிப்பாளா்கள் சுபிதா, விவேக், கோயில் பணியாளா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் சு. ஞானசேகரன், பணியாளா்கள் செய்துள்ளனா்.

கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுர... மேலும் பார்க்க

ஹாக்கி: சென்னை, தஞ்சாவூா், கோவை, நீலகிரி அணிகள் காலிறுதிக்கு தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, தஞ்சாவூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ஹா... மேலும் பார்க்க

10-இல் கோவில்பட்டி அரசு கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 10, 12ஆம் தேதிகளில் 2, 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கோ. சந்தனமாரியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்... மேலும் பார்க்க

பக்ரீத்: காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டியை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானுல் முஸ்லி­மீன் மற்றும் அல்ஜாமி உல் அஜ்ஹா் ஜூம் ஆ மஸ்ஜித் சாா்பாக கடற்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7இல் காலை 6.15-6.50-க்குள் கும்பாபிஷேகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி யாகசாலை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க