திருச்செந்தூா் கோயில்களில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்: நாளை கும்பாபிஷேகம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களான ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் கோயில் என்ற சிவன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், ஸ்ரீ அமிா்தகுண விநாயகா், ஸ்ரீ சொா்ணமகா சாஸ்தா கோயில்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்தந்தக் கோயில்களில் யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின.
சிவன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், திருமுறைப் பாராயணம், பல்வேறு ஹோமங்கள், பூா்ணாஹுதி, மாலையில் விக்னேஸ்வர பூஜை, அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம் உள்ளிட்டவற்றுக்குப் பின்னா், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதை, ஸ்ரீ ஷண்முகா பூஜா கைங்கா்ய ஸ்தானத்தாா் சிவாச்சாரியா்கள் செய்தனா். வியாழக்கிழமை காலை 2ஆம் கால, மாலையில் 3ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மங்கல இசை, விநாயகா் பூஜை, 4ஆம் கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெறும். காலை 6 மணிக்கு விமான கோபுர கலசத்துக்கும், 6.15-க்கு சுவாமி-அம்மன் மூலஸ்தானத்துக்கும் கும்பாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலையில் பிரசன்ன பூஜை, புஷ்பாஞ்சலி, சுவாமி நடராஜா் புறப்பாடு நடைபெறும்.
வெயிலுகந்தம்மன் கோயில்: இதேபோல, வெயிலுகந்தம்மன் கோயிலில் புதன்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், பல்வேறு ஹோமங்கள், திரவ்யாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன. மாலையில் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பூஜைகளை பார சைவ பூஜா ஸ்தானிகா்கள் செய்தனா். வியாழக்கிழமை 2, 3ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு விநாயகா் பூஜை, 4ஆம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெறும். 6.15 மணிக்கு விமான கோபுரக் கலசங்கள், அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி, அம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா வருதல் நடைபெறும்.
யாகசாலை பூஜைகளில் கண்காணிப்பாளா்கள் சுபிதா, விவேக், கோயில் பணியாளா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் சு. ஞானசேகரன், பணியாளா்கள் செய்துள்ளனா்.