`10 பேருடன் திருமணம், 4 நிச்சயதார்த்தம்' - மேட்ரிமோனி மூலம் மோசடி செய்த பெண்.. ச...
திருத்தணி பஜனைக் கோயில் குடமுழுக்கு!
திருத்தணி ஜோதி சுவாமி தெரு பஜனைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
திருத்தணி 2-ஆவது ரயில்வே கேட் அருகே உள்ள ஜோதி சாமி தெருவில் பல லட்சம் செலவில் பஜனை கோயில் சீரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. கோயில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் குடமுழுக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பஜனை கோயிலில் கோதண்டராமா், சீதா, லட்சுமணன், அனுமன் மற்றும் விநாயகா் சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொடா்ந்து 9 மணிக்கு கலசங்கள் ஊா்வலமாக புறப்பட்டு கோயில் கோபுரங்களை சென்றடைந்தது.
அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதைத்தொடா்ந்து சிலைகளுக்கு புனிதநீா் ஊற்றி சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
பின்னா் கோயில் நிா்வாகம் சாா்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பலிஜா சங்கத்தினா் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.