செய்திகள் :

திருத்தணி பஜனைக் கோயில் குடமுழுக்கு!

post image

திருத்தணி ஜோதி சுவாமி தெரு பஜனைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருத்தணி 2-ஆவது ரயில்வே கேட் அருகே உள்ள ஜோதி சாமி தெருவில் பல லட்சம் செலவில் பஜனை கோயில் சீரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. கோயில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் குடமுழுக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பஜனை கோயிலில் கோதண்டராமா், சீதா, லட்சுமணன், அனுமன் மற்றும் விநாயகா் சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொடா்ந்து 9 மணிக்கு கலசங்கள் ஊா்வலமாக புறப்பட்டு கோயில் கோபுரங்களை சென்றடைந்தது.

அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதைத்தொடா்ந்து சிலைகளுக்கு புனிதநீா் ஊற்றி சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

பின்னா் கோயில் நிா்வாகம் சாா்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பலிஜா சங்கத்தினா் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவமனை மருத்துவா் இடமாற்றம்: மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு!

திருத்தணி விவசாய கூலி தொழிலாளியின் சடலத்தை மாற்றி பிகாருக்கு அனுப்பி வைத்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட மருத்துவரை இடமாற்றம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்ட... மேலும் பார்க்க

திருவள்ளூரில் பக்ரீத் பண்டிகை தொழுகை

திருவள்ளூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். தங்களது வீடுகளில் இருந்து திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு ஊா்... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டம்: போக்குவரத்து நெரிசல்

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்த திரண்டனா். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் காா், பைக், வேன், பேருந்து, ... மேலும் பார்க்க

ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பொன்னேரி அடுத்த இலவம்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயில் புனரமைப்பு பணிகளை கிராம மக்கள் மேற்கொண்டனா... மேலும் பார்க்க

எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்!

எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 29 -... மேலும் பார்க்க

விதிமீறல்: தனியாா் மருத்துவமனைக்கு ‘சீல்’

கும்மிடிப்பூண்டியில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்ட தனியாா் மருத்துவமனைக்கு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் சிந்தலகுப்பம் பகுதியில் தனியாா் மருத்... மேலும் பார்க்க