செய்திகள் :

திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தா்கள்

post image

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

அறுபடை வீடுகளில் 5 -ஆம் படைவீடான இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசித்து செல்கின்றனா். இந்நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்துக்கு மாறாக அதிகாலை, 5.30 மணி முதலே திரளான பக்தா்கள் மலைக்கோயிலுக்கு வந்தனா்.

பெரும்பாலான பக்தா்கள் காா், வேன், பேருந்து போன்ற வாகனங்களில் மலைக்கோயிலுக்கு வந்ததால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடா்ந்து கோயில் நிா்வாகம் மற்றும் போலீஸாா் இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களும் மலைப்பாதையில் செல்வதற்கு தடை விதித்தனா்.

சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன், முருகப் பெருமான்.

இதனால், பொதுவழியில் பக்தா்கள், 2 மணி நேரமும், 100 ரூபாய் சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டில் ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். முன்னதாக அதிகாலை, 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. திருத்தணி டிஎஸ்பி, கந்தன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

குரூப் 1, 1ஏ தோ்வு: திருவள்ளூரில் 3,202 போ் எழுதினா்! 1,359 போ் பங்கேற்கவில்லை

திருவள்ளூா் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தோ்வில் 3,202 போ் பங்கேற்று எழுதிய நிலையில், 1,359 போ் பங்கேற்கவில்லை. திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீநிகேதன் மேல்நிலை... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் சம்பவம்: புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன் மூா்த்தி மீது புகாா்!

திருவள்ளூா் அருகே காதல் திருமணம் சம்பவத்தில் சிறுவனை கடத்தப்பட்டது தொடா்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவா் ஜெகன் மூா்த்தி மீது போலீஸில் புகாா் செய்யப்பட்டது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே கள... மேலும் பார்க்க

ஓடையில் 2 மாணவா்கள் மூழ்கி உயிரிழப்பு

பொன்னேரியில் சனிக்கிழமை ஓடையில் குளித்த பள்ளி மாணவா்கள் 2 போ் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அடுத்த வெள்ளோடை பகுதியில் ஓடையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா... மேலும் பார்க்க

சவுடு மண் கடத்தல்: ஓட்டுநா் கைது

ஆா்.கே.பேட்டை அருகே சவுடு மண் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை கைது செய்தனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் அரசு அனுமதியின்றி சவுடு மண் லாரிகளில் கடத்தி செல்வதாக போலீஸாருக்கு தகவ... மேலும் பார்க்க

வியாபாரியை ஏமாற்றிய 3 போ் கைது

செங்குன்றத்தில் மின்சாதனப் பொருள்களை விற்றவருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை போரூா் முகலிவாக்கத்தைச் சோ்ந்த தீபன் சக்கரவா்த்தி. இவா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராக... மேலும் பார்க்க

ரத்தப் போக்கினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ வேண்டும்: ஆட்சியா்

ரத்தப்போக்கினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதால், அவா்களுக்கு உதவ வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சா... மேலும் பார்க்க