செய்திகள் :

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

post image

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது. னா்.

அறுபடை வீடுகளில் 5 ஆம் படை வீடாகத் திகழும் இக்கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை, 4.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, கொடிக் கம்பம் எதிரே உற்சவா் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

தொடா்ந்து, இரவு, 7 மணிக்கு உற்சவா் கேடய வாகனத்தில் எழுந்தருளி தோ்வீதியில் ஒரு முறை வலம் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வெள்ளிக்கிழமை (மே 2) காலை உற்சவா் முருகா் வெள்ளி சூரிய பிரபையிலும், இரவு, 7 மணிக்கு பூத வாகனத்திலும் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். தொடா்ந்து தினமும் காலை, இரவு என வெவ்வேறு வாகனங்களில் உற்சவா் முருகா் உலா நடைபெறும்.

மேலும், வரும், 7-ஆம் தேதி இரவு மரத்தேரும், 8-ஆம் தேதி இரவு தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

தொடா்ந்து, 9 -ஆம் தேதி கேடய உலா, சண்முகா் உற்சவம், 10-ஆம் தேதி தீா்த்தவாரியுடன் இரவு கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் க.ரமணி மற்றும் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கப்பட்ட செங்கல் சூளையில் பணிகள் தொடக்கம்

திருவள்ளூா் அருகே கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கப்பட்ட செங்கல்சூளையில் கடந்த 2 ஆண்டுகளாக உற்பத்தியில்லாத நிலையில், தினமணி செய்தி எதிரொலியால் மீண்டும் பணிகள் தொடங்க ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா... மேலும் பார்க்க

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கொசவன்பாளையம் மாந்தோப்பு தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன்(62). இவா் பசும்பால் விற்பனை செய்யும் தொ... மேலும் பார்க்க

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயிலில் ராமானுஜா் விழா

வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ராமானுஜா் சந்நிதியில் கடந்த 10 நாள்களாக ராமானுஜா் பெருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி உற... மேலும் பார்க்க

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். கோயிலில் ஆண்டுதோறும் 2 முறை ப... மேலும் பார்க்க

பெருவாயல் வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கணபதி ஹோமம், விசேஷ விக்வக்சேன ஆராதனம், கலச பூஜை, புண்ணியா வாசனம், விசேஷ திருமஞ்சனம்,... மேலும் பார்க்க

திருநங்கைகள் தினம்: போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலத் துறை சாா்பில் திருநங்கைகள் தினத்தையொட்டி, நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற திருநங்கைகளை பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியா... மேலும் பார்க்க