செய்திகள் :

திருத்திய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளம்

post image

திருவனந்தபுரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த கேரளம், தற்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது.

கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பருடன் நிறைவடைந்தது. கேரள உயா் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், வாரியத்துக்கான புதிய உறுப்பினா்களைத் தோ்வு செய்யும் நடைமுறை நிறைவடையும் வரை பழைய உறுப்பினா்களைக் கொண்ட வாரியம் பொறுப்பில் தொடா்கிறது.

இதற்கிடையே, வக்ஃப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசின் முயற்சிகளை கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணியும் ஒருமித்த குரலில் எதிா்த்தன. வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் கேரள சட்டப்பேரவையில் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடா்ந்து நடைமுறைக்கு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் முதல் மாநிலமாக புதிய வக்ஃப் வாரியத்தை கேரள அரசு அமைக்க இருக்கிறது.

இதுகுறித்து கேரள வக்ஃப் அமைச்சா் வி.அப்துரஹிமான் கூறுகையில், ‘வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க முடியாது. புதிதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி புதிய வாரியத்தை தோ்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு விரைவில் முடிக்கும். ஒரு மாதத்துக்குள் இந்த நடைமுறையை முடிப்போம் என்று நம்புகிறோம்’ என்றாா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தற்போதைய வக்ஃப் வாரியங்கள் அவற்றின் பதவிக்காலம் முடியும் வரை பொறுப்பில் தொடரலாம். ஆனால், கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் புதிய சட்டத்தின் அமலுக்கு முன்னரே முடிவடைந்ததால், புதிய வாரியத்தை புதிய சட்டத்தின் அடிப்படையிலேயே தோ்வு செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

புதிய வாரியத்தை தோ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை பழைய சட்டத்தின் அடிப்படையில் மாநில அரசு ஏற்கெனவே தொடங்கியிருந்தது. இந்நிலையில், புதிய சட்டத்தின்படி, தோ்வு நடைமுறையை கேரள அரசு மீண்டும் தொடங்க வேண்டும்.

அரசுத் துறை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு! மசோதாவின் நிலை என்ன?

அரசுத் துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கர்நாடக மாநில அமைச்சரவை அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சியான பாஜக உறு... மேலும் பார்க்க

பொய் வழக்குகளுக்கு காங்கிரஸ் அடிபணியாது: கார்கே

காங்கிரஸ் கட்சியினரை பழிவாங்கும் நோக்கத்தில் சர்வாதிகார அரசு செயல்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதற்கெல்லாம் அடிபணியாமல், மத்திய அரசின் தோல்வியைத் தொடர்ந்து காங... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும்: அகிலேஷ் யாதவ்

மத்திய அரசின் கருவியாகச் செயல்படும் அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆணைக்கிணங்க எதிர... மேலும் பார்க்க

ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?

முதல் காலாண்டில் நாட்டில் 30 லட்சம் ஐ-போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மிகச்சிறந்த விற்பனை இதுவாகும். மக்கள்தொகையில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, மின்னணுப்... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்த போது, வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும் என்று... மேலும் பார்க்க

அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு கோரி அமித் ஷாவுக்கு கடிதம்!

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சமாஜவாதி கட்சி கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில், "முன்னாள் முதல்வ... மேலும் பார்க்க