செய்திகள் :

திருப்பதியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

post image

திருமலை திருப்பதி கோயிலில் ஹிந்து மதத்தினர் மட்டுமே பணியமர்த்தப்படுவர் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது பேரன் பிறந்தநாளையொட்டி, திருமலை திருப்பதி கோயிலில் தரிசனம் மேற்கொள்ள குடும்பத்துடன் சென்றார். இதனைத் தொடர்ந்து, ஒருநாள் பிரசாத செலவை ஏற்று, அறக்கட்டளைக்கு ரூ. 44 லட்சம் நன்கொடையையும் அளித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, ``திருமலை கோயில்களில் ஹிந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். திருப்பதி மலையில் வேற்று மதத்தவர்கள் பணியில் ஈடுபடாத வகையில் நடவடிக்கைககளும் எடுக்கப்படும். இருப்பினும், பிற மதத்தவர்கள் தற்போது பணிபுரிந்தால், அவர்களுக்கு வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவர்.

இதையும் படிக்க:கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் 6 மாதங்களுக்கு இடைநீக்கம்! என்ன காரணம்?

வெளி மாநிலங்களின் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்படும். இதற்கான ஒத்துழைப்புகோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதவுள்ளேன்.

அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் வெங்கடேஸ்வர சுவாமியின் கோயில்கள் நிறுவப்பட வேண்டும் என பக்தர்கள் பலரும் விரும்புகிறார்கள். இதனைக் கருத்தில்கொண்டும் கோயில்களை கட்டுவதற்காக புதிய அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

ஏப். 1 முதல் யுபிஐ சேவை நிறுத்தம்!

செயலற்ற நிலையில் இருக்கும் மொபைல் எண்களின் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படுவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது.யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாள்கள்வரையில் செயலற்றதாக இருந்தால், அதன... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ள ஆந்திரம் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் தற்போது கோயிலில் பணிபுரிந... மேலும் பார்க்க

தில்லி நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பணம் பறிமு... மேலும் பார்க்க

நதிநீா் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமை உருவாக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவ... மேலும் பார்க்க

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களைக் கடந்தது!

நாட்டில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 1 பில்லியன் (100 கோடி) டன்களைக் கடந்துள்ளது. இது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ‘நாட்டின் எல்லைப் பக... மேலும் பார்க்க