செய்திகள் :

திருப்பதி கோயிலில் ரூ.100 கோடி ஊழல்! - ஜெகன்மோகன் ரெட்டி மீது TDP குற்றச்சாட்டு|video

post image

முன்பு திருப்பதி கோயிலில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது என்று தற்போது ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசக் கட்சியின் பொது செயலாளர் நாரா லோகேஷ் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதற்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார் அவர். மேலும், அவர் ஆந்திராவை இதற்கு முன் ஆட்சி செய்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் மீது தான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

திருப்பதி
திருப்பதி

அந்த வீடியோ குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது...

"ஒய்.எஸ்.பி திருடர்கள் ஶ்ரீயின் சொத்துகளைக் கொள்ளையடித்துள்ளனர். நூறு கோடி ரூபாய் பணத் திருட்டுக்குப் பின்னால் ஒய்.எஸ்.பி தலைவர்கள் தான் இருக்கிறார்கள்.

ஜெகனின் ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில் ஊழல்கள் மலிந்து கிடந்தன.

திருடர்கள், கொள்ளையர்கள், மாஃபியா டான்களுக்கு ஆதரவாக ஜெகன் இருந்தார். சுரங்கங்கள், நிலங்கள், காடுகள் என அனைத்திலும் ஜெகனின் கும்பல் மக்களைக் கொள்ளையடித்தது.

கடைசியில், அவர்கள் திருமலா ஶ்ரீவாரியின் சொத்துகளைக் கூட விட்டு வைக்கவில்லை. திருப்பதி தேவஸ்தான தலைவர் பூமணா கருணாகர் ரெட்டியின் உதவியால் தற்போது இந்தத் திருடர்கள் பிடிப்பட்டுள்ளனர்.

கோடிக்கணக்கான சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அந்தப் பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

அதிகாரிகளின் ஆதரவுடன் ஜெகன் கும்பல் ஸ்ரீவாரியில் செய்யாத ஊழல் எதுவும் இங்கே இல்லை. பக்தர்கள் ஒரு சிறந்த பிரசாதமாக நினைக்கும் லட்டை அசுத்தப்படுத்தியுள்ளனர். அன்ன பிரசாதத்தில் ஊழல் நடந்துள்ளது.

திருமலா தரிசனத்தை விற்றதன் மூலம், எளிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்தது கடினமாகியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த பிரிட்டன், ஆஸ்., கனடா- நெதன்யாகு எதிர்ப்பு; இந்தியா நிலைப்பாடு?|அலசல்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல் கரம் தினம் தினம் நீண்டுக்கொண்டே இருக்கின்றன. 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்தப் போர் இன்னும் சில தினங்களில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆ... மேலும் பார்க்க

50% வரி, Chabahar, H-1B விசா; வரிசைக்கட்டி உள்ள பிரச்னைகள்... அமெரிக்கா செல்லும் பியூஷ், ஜெய்சங்கர்!

இன்று அமெரிக்காவில் ஆறாவது கட்ட இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை நடக்க உள்ளன. (இந்திய நேரப்படி இன்று இரவு)இந்தப் பேச்சுவார்த்தைக்காக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா... மேலும் பார்க்க

கனிமொழி பொதுக்கூட்டத்தில் திடீரென புகுந்த ஆம்புலன்ஸ்; நாகர்கோவிலில் நடந்தது என்ன?

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு- தீர்மான உறுதிமொழி ஏற்பு கூட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி கி... மேலும் பார்க்க

TVK: "விஜய்க்குக் கூடிய கூட்டத்தைவிட நடிகர் அஜித்துக்கு இரண்டு மடங்கு கூடும்" - ராஜேந்திர பாலாஜி

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சித் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தொடர்ந்து மாநாடு, அறிக்கைகள் எனத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை `உங்க விஜய் நா... மேலும் பார்க்க

'யோவ் இங்க பாரு'- கடுப்பான திருச்சி சிவா; மன்னிப்பு கேட்ட செந்தில் பாலாஜி - வைரலாகும் வீடியோ

கரூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.20) அன்று திமுகவின் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் சார்பில் 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் சட்டமன்ற... மேலும் பார்க்க

பாமக: `கூட்டணி பேச்சுவார்த்தை தைலாபுரத்தில்தான் நடக்கும்!’ – எம்.எல்.ஏ அருள் சொல்வதென்ன ?

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நாளை பா.ம.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், நேற்று உயர்மட்டக் குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில... மேலும் பார்க்க