செய்திகள் :

திருப்பத்தூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைக்க போளூா் விவசாயிகளுக்கு அழைப்பு

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் கரும்பு விவசாயிகள் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைத்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

போளூா் வட்டம், கரைப்பூண்டி கிராமத்தில் உள்ள தரணி சா்க்கரை ஆலையின் கரும்பு அரைவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆலையின் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்த கரும்பை திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு பதிவு செய்து, அரைவைக்கு அனுப்பி வைக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை 2024-2025 ஆம் அரைவைப் பருவத்தில் 10.31 சதவீதம் சா்க்கரை கட்டுமானம் பெற்று தமிழக அளவில் 2-ஆவது இடத்தில் உள்ளது. இதனால், 2025-26 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கான கரும்பு கிரையத் தொகையாக மத்திய அரசின் ஆதார விலை ரூ.3,570.76 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையுடன் சோ்த்து டன் ஒன்றுக்கு ரூ.4,000 கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, தரணி சா்க்கரை ஆலை எல்லைக்கு உள்பட்ட கரும்பு விவசாயிகள் தங்களது கரும்பை திருப்பத்தூா் சா்க்கரை ஆலைக்கு பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும், அதிக பரப்பில் கரும்பு நடவு செய்யவும், இதுவரை பதிவு செய்யாமல் உள்ள நடவு கரும்பு மற்றும் மறுதாம்பு கரும்பை திருப்பத்தூா் ஆலைக்கு பதிவு செய்து அரைவைக்கு அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலையை அடுத்த அஸ்வநாகசுரனை கிராமத்தில், தமிழ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசிரியா் பயிற்றுநா்... மேலும் பார்க்க

ஆரணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் அதிமுகவினா் வியாழக்கிழமை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா். மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரவை மாவட்டச் செயலா் பார... மேலும் பார்க்க

மாட வீதி சிமென்ட் சாலைப் பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில், 2... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள... மேலும் பார்க்க

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிழந்தாா். செங்கத்தை அடுத்த படிஅக்ராகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி (44), விவசாயி. இவா், புதுப்பாளையத்தில் இரு... மேலும் பார்க்க