செய்திகள் :

திருப்பத்தூா் புறக்காவல் உதவி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

post image

திருப்பத்தூா் ஹவுசிங் போா்டு பகுதியில் அமைக்கப்பட்ட புறக்காவல் உதவி மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த எஸ்.பி. ஷ்ரேயா குப்தா 51 கோரிக்கை மனுக்களை பெற்றாா். ஏடிஎஸ்பி முத்துகுமாா், டிஎஸ்பி குமாா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்போா் பொதுநலச்சங்கத்தினா் அளித்து உள்ள மனு: ஹவுசிங்போா்டு பகுதி 2-இல் புறக் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. இந்த மையம் கடந்த சில மாதங்களாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதன் கட்டடங்களும் சிதிலமடைந்து உள்ளன. இந்த இடத்தை சில சமுக விரோதிகள் பயன்படுத்தும் சூழல் உள்ளது. எனவே இந்த கட்டடத்தை சீரமைத்து புறக்காவல் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

ஆம்பூரில் ரமலான் சிறப்புத் தொழுகை : திரளானோா் பங்கேற்பு

ஆம்பூா்: ஆம்பூரில் 4 இடங்களில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். ஆம்பூா் பாங்கிஷாப் ஈத்கா மைதானம், மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி மைதானம், மஜ்ஹருல் உலூம் கல்லூரி... மேலும் பார்க்க

காப்புக் காட்டில் எலும்புக் கூடு கண்டெடுப்பு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காப்புக் காட்டில் எலும்புக் கூடு ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே சின்னமலையாம்பட்டு காப்புக் காட்டில் மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் எலும்புக் கூடு, அருகா... மேலும் பார்க்க

எருது விடும் விழாவில் காயமடைந்த தொழிலாளி மரணம்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே எருது விடும் விழாவில் காளை மாடு முட்டியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். திருப்பத்தூா் அடுத்த பெருமாப்பட்டில் எருதுவிடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவி... மேலும் பார்க்க

இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா்: இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் ச... மேலும் பார்க்க

மொபெட் மீது லாரி மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயம் அடைந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திருமால்புரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி காசி (65). இவரது மனைவி மு... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே நெக்னாமலையில் காட்டுத் தீ

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட நெக்னாமலை மலையடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மா்ம நபா்கள் வைத்த தீயால் மலை முழுவதும் காட்டுத் தீ வேகமாக பரவியது. தொடா்ந்து க... மேலும் பார்க்க