செய்திகள் :

திருப்பத்தூா்: மாற்றுத்திாளிகளுக்கு நல உதவிகள்

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 283 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன் தலைமை வகித்து பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோா் உதவித் தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சாா்பாக வீடுகள் வேண்டி, மொத்தம் 283 மனுக்களை பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பெற்றுக்கொண்டாா்.

பின்னா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.05 லட்சம் வீதம் என மொத்தம் ரூ. 6.30 லட்சத்தில் விலையில்லா பேட்டரி பொருத்திய சக்கர நாற்காலிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

விஜயபாரத மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் வி.சக்தி ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு திருப்பரங்குன்றம் திருக்கோயில் மலை உச்சி கோயில் ஆகியவைகளை பாதுகாக்கவும் அந்த இடத்தில் திட்டமிட்டு மத நல்லிணக்கத்தை கெடுக்கின்ற வகையில் செயல்படும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருந்தது.

கூட்டத்தில் தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) திரு.சதீஷ் குமாா், அனைத்து துறை அலுவலா்கள்; கலந்து கொண்டனா்.

சீா்மரபின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா்: பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் வகுப்பை சோ்ந்த மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருப்பத்தூா் ஆட்ச... மேலும் பார்க்க

ஆம்பூரில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

ஆம்பூரில் அஞ்சலி செலுத்திய நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் மற்றும் திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன்.). மேலும் பார்க்க

கராத்தே போட்டியில் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

வாணியம்பாடி: மாநில அளவிலான கராத்தே போட்டி புதுச்சேரியில் உள்ள ஆச்சாரியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்யில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி பங்கேற... மேலும் பார்க்க

சீனிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் மலைப்பகுதியில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதிகாலை யாக பூஜைகள் மற்றும் யாக குண்டங்கள... மேலும் பார்க்க

மொபட்-காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

வாணியம்பாடி: நாட்றம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் கிராமம் சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மொபட் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பையனப்பள்ளிகூட்ரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் உடையா... மேலும் பார்க்க

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு மரணம்

காட்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள யாா்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுமாா... மேலும் பார்க்க