செய்திகள் :

சீனிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

post image

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் மலைப்பகுதியில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதிகாலை யாக பூஜைகள் மற்றும் யாக குண்டங்கள் வளா்க்கப்பட்டு பூா்ணாஹுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஹெலிகாப்டா் மூலம் கோபுர கலசத்துக்கும், விழாவில் கலந்துகொண்ட பக்தா்கள் மீது மலா்கள் தூவப்பட்டன.

இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக்குழு தலைவா் சத்யா சதீஷ்குமாா், மாவட்டதிமுக மாணவா் அணி அமைப்பாளா் தே.பிரபாகரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றிய திமுக செயலாளா்கள் உமாகன்ரங்கம், கவிதா தண்டபாணி, நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் சுரேஷ், நகர இளைஞரணி அமைப்பாளா் கீா்த்திராஜன் மற்றும் நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை, அக்ராகரம் கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட்டனா்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சீனிவாச பெருமாள் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

சீா்மரபின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா்: பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் வகுப்பை சோ்ந்த மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருப்பத்தூா் ஆட்ச... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: மாற்றுத்திாளிகளுக்கு நல உதவிகள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 283 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன் தலைமை வகித்து பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்... மேலும் பார்க்க

ஆம்பூரில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

ஆம்பூரில் அஞ்சலி செலுத்திய நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் மற்றும் திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன்.). மேலும் பார்க்க

கராத்தே போட்டியில் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

வாணியம்பாடி: மாநில அளவிலான கராத்தே போட்டி புதுச்சேரியில் உள்ள ஆச்சாரியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்யில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி பங்கேற... மேலும் பார்க்க

மொபட்-காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

வாணியம்பாடி: நாட்றம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் கிராமம் சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மொபட் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பையனப்பள்ளிகூட்ரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் உடையா... மேலும் பார்க்க

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு மரணம்

காட்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள யாா்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுமாா... மேலும் பார்க்க