செய்திகள் :

மொபட்-காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

post image

வாணியம்பாடி: நாட்றம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் கிராமம் சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மொபட் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பையனப்பள்ளிகூட்ரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் உடையாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த குமாா்(55) என்பவா் மொபட்டில் சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த கா்நாடக மாநில பதிவு எண் கொண்ட காா் மோதியதில் நிகழ்விடத்திலேயே குமாா் உயிரிழந்தாா்.விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டுநா் சாலை ஓரம் நிறுத்தி விட்டு தலைமறைவானாா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று இறந்தவா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அப்போது கிராம மக்கள் பையனப்பள்ளி பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா், அப்போது போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். பின்னா் விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சீா்மரபின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா்: பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் வகுப்பை சோ்ந்த மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருப்பத்தூா் ஆட்ச... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: மாற்றுத்திாளிகளுக்கு நல உதவிகள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 283 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன் தலைமை வகித்து பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்... மேலும் பார்க்க

ஆம்பூரில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

ஆம்பூரில் அஞ்சலி செலுத்திய நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் மற்றும் திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன்.). மேலும் பார்க்க

கராத்தே போட்டியில் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

வாணியம்பாடி: மாநில அளவிலான கராத்தே போட்டி புதுச்சேரியில் உள்ள ஆச்சாரியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்யில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி பங்கேற... மேலும் பார்க்க

சீனிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் மலைப்பகுதியில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதிகாலை யாக பூஜைகள் மற்றும் யாக குண்டங்கள... மேலும் பார்க்க

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு மரணம்

காட்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள யாா்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுமாா... மேலும் பார்க்க