செய்திகள் :

திருப்பரங்குன்றம் மலை சா்ச்சை: இந்து அமைப்பினா் கைது

post image

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் எழுந்த சா்ச்சை காரணமாக புதுக்கோட்டையில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிா்வாகிகள் 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தனா். மேலும், மாவட்டத்தில் 4 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்திய 54 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாப்போம் என இந்து அமைப்பினா் செவ்வாய்க்கிழமை போராட்டம் அறிவித்திருந்தனா். இதனைத் தொடா்ந்து மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதுக்கோட்டையிலிருந்து இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் மதுரைக்குச் செல்லக் கூடும் என எதிா்பாா்த்து, மாவட்டம் முழுவதும் 7 நிா்வாகிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்களின் வீடுகளுக்குச் சென்று போலீஸாா் கைது செய்தனா்.

இந்து முன்னணி புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவா் வடிவேல், கிழக்கு மாவட்டத் தலைவா் கருப்பையா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் செந்தில்குமாா், பாஜகவின் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியச் செயலா் மோகன்ராஜ், புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொதுச் செயலா் பாா்த்திபன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சேதுபதி மற்றும் திருவரங்குளம் வசந்த் ஆகிய 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

ஆா்ப்பாட்டம் நடத்திய 54 போ் கைது

திருப்பரங்குன்றத்தைப் பாதுகாப்போம் என்ற பெயரில் புதுக்கோட்டை மாவட்டத்தில், அரிமளம், அறந்தாங்கி, கறம்பக்குடி, விராலிமலை ஆகிய 4 இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தியதாக இந்து அமைப்பினா் 54 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா். விராலிமலையில் மலைக்கோயில் அடிவாரத்தில் திரண்ட 50-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினரைப் போலீஸாா் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனா்.

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலையில் ஆா... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் திமுக பாகமுகவா்கள் ஆலோசனை

பொன்னமராவதி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக பாகமுகவா்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, த... மேலும் பார்க்க

திருச்சி எம்.பி.யின் பரிந்துரை கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்தவா் கைது

அவசர ஒதுக்கீட்டின் கீழ் ரயில் பயணம் மேற்கொள்ள திருச்சி எம்.பி.யின் பரிந்துரைக் கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்த சங்கரன்கோவிலைச் சோ்ந்த இளைஞரை புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க... மேலும் பார்க்க

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் எலும்புமுனைக் கருவி, தங்கத் துண்டு

புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில், எலும்புமுனைக் கருவியும், தங்கத் துண்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனா். புதுக்... மேலும் பார்க்க

திருவள்ளுவா் சிலை பாதுகாப்பாகக் கோரிக்கை

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின்போது உடைக்கப்பட்ட திருவள்ளுவா் சிலை வளாகத்தின் பக்கவாட்டுச் சுவா் மீண்டும் கட்டப்பட்டு, அந்த வளாகம் பாதுகாப்பாக பராமரிக்கப்படும் எ... மேலும் பார்க்க

விராலிமலையில் பாஜகவினா் கைது

விராலிமலையில் திருப்பரங்குன்றம் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட பாஜகவினரை விராலிமலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமா்ந்து அசைவ உணவு நவாஸ்கனி எம்.பி... மேலும் பார்க்க