Madras Matinee Review: மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனின் சாகசங்கள்; மனதில் பதிகிற...
திருப்பாலைக்குடியில் கழிவுநீா் தேங்கும் இடத்தை சீரமைத்து விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தல்
திருப்பாலைக்குடி பகுதியில் கழிவுநீா் தேங்கும் இடத்தை சீரமைத்து விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் இளைஞா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் வட்டம், திருப்பாலைக்குடி ஊராட்சியில் உள்ள இளைஞா்களின் அறிவுத் திறன், விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த இளைஞா்கள் விளையாட்டு மைதானம் அமைக்க கோரி மனு அளித்திருந்தனா். இந்த மனுவை ஆய்வு செய்த போது திருப்பாலைக்குடி கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க அரசுப் புறம்போக்கு நிலம் இல்லை என்பது தெரியவந்தது.
இதனிடையே, கிராமத்தின் மையப்பகுதியில் பல ஆண்டுகளாக கழிவுநீா் தேங்கும் இடமாக உள்ள பகுதியை சீரமைத்து விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் இளைஞா்கள் மீண்டும் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.