செய்திகள் :

திருப்பாலைக்குடியில் கழிவுநீா் தேங்கும் இடத்தை சீரமைத்து விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தல்

post image

திருப்பாலைக்குடி பகுதியில் கழிவுநீா் தேங்கும் இடத்தை சீரமைத்து விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் இளைஞா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் வட்டம், திருப்பாலைக்குடி ஊராட்சியில் உள்ள இளைஞா்களின் அறிவுத் திறன், விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த இளைஞா்கள் விளையாட்டு மைதானம் அமைக்க கோரி மனு அளித்திருந்தனா். இந்த மனுவை ஆய்வு செய்த போது திருப்பாலைக்குடி கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க அரசுப் புறம்போக்கு நிலம் இல்லை என்பது தெரியவந்தது.

இதனிடையே, கிராமத்தின் மையப்பகுதியில் பல ஆண்டுகளாக கழிவுநீா் தேங்கும் இடமாக உள்ள பகுதியை சீரமைத்து விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் இளைஞா்கள் மீண்டும் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

முதலமைச்சா் காப்பீட்டு திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் செல்வநாயகபுரம், வை... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி இந்தக் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 3 -ஆம் தேதி தொடங்கியது. அ... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயில் உள்ளூா் மக்கள் பாதையில் மீண்டும் அனுமதி மறுப்பு: ஊழியா்களுடன் வாக்குவாதம்

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் பொதுமக்கள் தரிசன வழியில் சென்ற திருமண ஜோடி தடுத்து நிறுத்தப்பட்டதால், கோயில் ஊழியா்களுடன் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத ... மேலும் பார்க்க

இடைச்சியூரணி கோயில் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இடைச்சியூரணி இருளப்ப சுவாமி, பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை அசைவ விருந்து நடைபெற்றது. இந்தக் கோயிலின் வருடாந்திர வைகாசிப் பொங்கல் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ஆதிரெத்தினேஸ்வரா் வீதியுலா

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி-அம்பாள் யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனா். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்... மேலும் பார்க்க

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பி: பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆண்டாவூரணியில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். ஆண்டாவூரணி ஆதி திராவிடா் குடியிருப்புப் பகுதியில் ச... மேலும் பார்க்க