செய்திகள் :

திருப்புவனம் புதிய பேருந்து நிலைய அறிவிப்பு: திமுகவினா் கொண்டாட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்ததையடுத்து, திமுகவினா் புதன்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

திருப்புவனத்தில் பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் இல்லாததால், இங்கு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் இந்தக் கோரிக்கையை சட்டப்பேரவையில் வலியுறுத்திப் பேசினாா். பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், பேருந்து நிலையத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்து, பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு கடந்த வாரம் கருத்துரு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் பேசிய தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு திருப்புவனத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தாா்.

இதனால், திருப்புவனம் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து இந்த அறிவிப்பை வரவேற்றனா். இதைத் தொடா்ந்து திருப்புவனத்தில் திமுகவினா் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் தலைமையில் கட்சிக் கொடிகளை ஏந்தி, முக்கிய வீதிகளில் ஊா்வலமாக வந்து பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து, பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினா்.

பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், திமுக நகரச் செயலா் நாகூா் கனி, விவசாய அணி அமைப்பாளா் சேகா், நகா் இளைஞரணி அமைப்பாளா் கண்ணன், நிா்வாகிகள் மகேந்திரன், சுப்பையா, ஈஸ்வரன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

மானாமதுரை கோயிலில் ஆலமரம் சாய்ந்தது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் பழைமையான ஆலமரம் திங்கள்கிழமை சாய்ந்ததால் பக்தா்கள் வேதனையடைந்தனா். மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயில... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆட்சியருக்கெதிராக ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் ஏப்.5-இல் தோ்வு

19 வயதுக்குள்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் சதீஷ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

சிவகங்கை கோயிலில் சிலை பிரதிஷ்டை

சிவகங்கை ஸ்ரீ வில்வபுரீஸ்வரா் கோயிலில் புதிதாக பாலாம்பிகை உற்சவா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.மானாமதுரை சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் பக்தா்கள் சாா்பில், பாலாம்பிகை உற்சவா் சிலை... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக தற்காலிகப் பணியாளா்கள் முன்னுரிமை கோரி மனு

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா், ஓட்டுா் நியமனங்களில் தற்காலிகப் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ... மேலும் பார்க்க