செய்திகள் :

திருப்பூரில் சிலிண்டர் வெடித்து 42 கொட்டகைகள் தரைமட்டம்

post image

திருப்பூரில் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில், அடுத்தடுத்து இருந்த 42 தகரக் கொட்டகைகள் தரைமட்டமாகின.

திருப்பூரில், கல்லூரி சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நகரில் அடுத்தடுத்து 4 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், ஒரே இடத்தில், தொழிலாளர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த 42 கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின.

42 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டமான நிலையில், அதிலிருந்த தொழிலாளர்களின் உடைமைகளும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக எரிந்துகொண்டிருக்கும் வீடுகளுக்குள் இருந்த பொருள்களை மக்கள் வெளியற்றி வருகிறார்கள்.

சாயாதேவி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் 42 தகரக் கொட்டகைகள் அமைத்து வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் தங்கியிருந்த நிலையில் இன்று விபத்து நேரிட்டுள்ளது.

என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம்: ராமதாஸ்

என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இனிஷியல் போட்டுக் கொள்ளலாம் என்றும் பாமக தலைவர் அன்புமணிக்கு தந்தையும் அக்கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.கும்பகோணத்தில் பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.திருவாரூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சன்னநிதி ... மேலும் பார்க்க

நலத்திட்டங்களைப் பெறுவோர் தூதுவர்களாக வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

அரசு நலத்திட்டங்களைப் பெறும் மக்கள் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தர். நாமக்கல்லில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் முடிவற்ற திட்டப் பணிகளைத் தொ... மேலும் பார்க்க

நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சிலை! - முதல்வர் அறிவிப்பு

பாரம்பரிய நெல் வகைகளை காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மறைந்த நெல் ஜெயராமனின் சிலை திருத்துறைப்பூண்டியில் நிறுவப்படும் என்று திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருவாரூர் ... மேலும் பார்க்க

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு டிஆர்பி தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுகலை ... மேலும் பார்க்க

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை உத்தரவு நிறுத்திவைப்பு!

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை ஜூலை 31 வரை நிறுத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத... மேலும் பார்க்க