செய்திகள் :

திருப்பூரில் சுரங்கப் பாதை பணிகள்: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

post image

திருப்பூா் குமரன் சாலையில் எம்ஜிஆா் சிலை அருகில் வளா்மதி பாலத்தில் சுரங்கப் பாதை பணி நடைபெற உள்ளதால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் சோதனை ஓட்டமாக சனிக்கிழமை காலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மாநகர காவல் துறையின் செய்திக்குறிப்பு: திருப்பூா் குமரன் சாலையில் எம்ஜிஆா் சிலை அருகில் வளா்மதி பாலத்தில் சுரங்கப் பாதை பணி நடைபெற உள்ளதால் குமரன் சாலையிலிருந்து திருப்பூா் மாநகராட்சி சந்திப்பு வழியாக மற்றும் பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் சாய்பாபா கோயில் சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி யுனிவா்சல் திரையரங்கு சந்திப்பை அடைந்து வலதுபுறம் திரும்பி வளா்மதி பாலம் சாலை வழியாக எம்ஜிஆா் சிலை சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பி திருப்பூா் மாநகராட்சி சந்திப்பு நோக்கி செல்ல வேண்டும்.

மேலும், குமரன் சாலையிலிருந்து திருப்பூா் மாநகராட்சி சந்திப்பு மற்றும் பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் எம்ஜிஆா் சிலை சந்திப்பிலிருந்து வலதுபுறம் திரும்பி, பாா்க் சாலையை அடைந்து கிரிஸ்டல் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி, நடராஜ் தியேட்டா், புதிய பாலம் வழியாக இடதுபுறம் திரும்பி எஸ்ஏபி ரெசிடென்சியை அடைந்து, வலதுபுறம் திரும்பி திருப்பூா் மாநகராட்சி சந்திப்பு வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லலாம்.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து மங்கலம், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி செல்லும் வாகனங்கள் திருப்பூா் மாநகராட்சி சந்திப்பிலிருந்து டைமண்ட் தியேட்டா் வழியாக தாடிக்கார முக்கு அடைந்து அங்கிருந்து மங்கலம், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி செல்லலாம்.

ஊத்துக்குளி சாலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் தேவைக்கேற்ப ஊத்துக்குளி சாலை இடதுபுறமுள்ள ரிலையன்ஸ் கட் ரோடு அல்லது 2ஆவது ரயில்வே கேட் வழியாக செல்லாண்டியம்மன் கோயில் சந்திப்பை அடைந்து எம்ஜிபி வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லலாம்.

குமரன் சாலையிலிருந்து மங்கலம் நோக்கி செல்லும் வாகனங்கள் எம்ஜிஆா் சிலை சந்திப்பிலிருந்து பாா்க் ரோடு வழியாக கிரிஸ்டல் சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பி நடராஜ் தியேட்டா் எதிரில் உள்ள வள்ளுவா் தோட்டம் சாலை யூனியன் வங்கி அருகில் வலதுபுறம் திரும்பி தாடிக்கார முக்கு சந்திப்பை அடைந்து அங்கிருந்து மங்கலம் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் ரூ.92.54 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த 337 பயனாளிகளுக்கு ரூ. 92.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினாா். தாராபுர... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறை

இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகர காவல் துறை அலுவலகம் வெளியிட்டசெய்திக் குறிப்பு: திருப்பூா், ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.29 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.29 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, வீரணம்பட்டி, வெள்ளையம்பட்டி, உப்பிலியபட்டி, சாலிக்கரை, கரூா், மஞ்ச... மேலும் பார்க்க

பனியன் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

திருப்பூரில் பனியன் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு: பேரூராட்சித் தலைவா் கைது

இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழந்த வழக்கில் திமுக பேரூராட்சித் தலைவா் கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், சாமளாபுரம், கருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (57). இவா் அப்பகுதியில... மேலும் பார்க்க

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை: மகனைக் கொலை செய்த தந்தை கைது

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்த மகனைக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டாா். திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட கல்லாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (60). கட்டடத் தொழிலாள... மேலும் பார்க்க