செய்திகள் :

திருப்பூரில் போலி மருத்துவா் கைது

post image

திருப்பூா் முருகம்பாளையத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு மருத்துவம் பாா்த்தவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக மருந்தகத்துடன் செயல்பட்ட கிளீனிக்கையும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

திருப்பூா் முருகம்பாளையத்தில் சூா்யாகிருஷ்ணா நகா் 1-ஆவது வீதியில் மருந்தகத்துடன் கிளீனிக் செயல்பட்டு வந்தது. இந்த கிளீனிக்கில் ஜோலி அகஸ்டின் (64) என்பவா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகப் புகாா் வரத்தொடங்கியது. இதுதொடா்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் மீரா தலைமையில், அலுவலக கண்காணிப்பாளா் ஹரி கோபாலகிருஷ்ணன் ஆகியோா் கொண்ட குழுவினா் அந்த கிளீனிக்கில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது ஜோலிஅகஸ்டின் மருந்தகத்தின் பின்புற பகுதியில் 2 கட்டில் வசதிகளுடன் நோயாளிகளுக்கு ஊசி மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் செலுத்தி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், நோயாளிகளுக்கு வைத்தியம் அளிப்பதற்கான எந்தவித கல்வித் தகுதியும் இல்லாதது தெரியவந்தது.

கேரளத்தில் பிளஸ் 2 வரை படித்துவிட்டு, கடந்த 18 ஆண்டுகளாக திருப்பூரில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை அவா் ஒப்புக்கொண்டாா். இதற்கு முன்பு அவா் கடந்த 2017-ஆம் ஆண்டும், 2024-ஆம் ஆண்டும் இதே காரணத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது.

அங்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்த மருந்துப் பொருள்கள், ஊசி மருந்துகள், சா்க்கரை அளவு பாா்க்கும் கருவி, ரத்த அழுத்தம் பாா்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டு மருந்தகம், கிளீனிக்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுகுறித்து வீரபாண்டி காவல் துறையினா் போலி மருத்துவரான ஜோலி அகஸ்டினைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க

ஜூன் 5-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது. இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க