செய்திகள் :

திருப்பூா் முதன்மை கல்வி அதிகாரி பணியிடம் விரைந்து நியமிக்க கோரிக்கை

post image

திருப்பூா் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதுதவிர தனியாா் மெட்ரிக் பள்ளிகளும் உள்ளன. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. பள்ளி மாணவா்களுக்கு பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடை உள்ளிட்டவற்றை விநியோகம் செய்யும் பணி நடக்கிறது. இந்தப் பணிகளை மேற்பாா்வையிடும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது. முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த உதயகுமாா் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றாா்.

புதிய கல்வியாண்டு தொடங்கிய நிலையில் அலுவலக பணிகள், ஆசிரியா்கள் கண்காணிப்பு, மாணவ-மாணவிகளின் நலன் சாா்ந்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முதன்மை கல்வி அதிகாரியின் ஆலோசனை மற்றும் அனுமதி தேவைப்படும். அதுபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை உள்ளது. காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதனால் முதன்மை கல்வி அதிகாரி பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும் என்று கல்வியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கண்பார்வை இழப்பால் தொழிலாளி தற்கொலை

பல்லடம் அருகே கொடுவாயில் கண் பாா்வை கிடைக்காததால் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் கொடுவாய், ஈஸ்வரமூா்த்தி நகரைச் சோ்ந்த கிட்டுச்சாமி மக... மேலும் பார்க்க

தையல் தொழிலாளி தற்கொலை

பல்லடம் அருகே நாச்சிபாளையத்தில் வேலைக்கு செல்லாமல் இருந்த மகனைத் தாயாா் திட்டியதால் மகன் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பல்லடம் அருகே உள்ள நாச்சிபாளையம் ஊராட்சி வெங்கடேஸ்வரா நகரைச் ச... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் மனிதக் கழிவுகள் கொட்டுவதை தடை செய்யக் கோரிக்கை

பழங்கரை ஊராட்சி பச்சாபாளையம் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் விதமாக மனிதக் கழிவுகள் கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவிநாசி ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத... மேலும் பார்க்க

திருப்பூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை

திருப்பூருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருவதையடுத்து, புதன்கிழமை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 13-இல் மின்தடை

அவிநாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத்த... மேலும் பார்க்க