Royal Enfield: `பஞ்சாப் டு இங்கிலாந்து' பைக் லவ்வரின் செயலால் வைரலாகும் வீடியோ!
கண்பார்வை இழப்பால் தொழிலாளி தற்கொலை
பல்லடம் அருகே கொடுவாயில் கண் பாா்வை கிடைக்காததால் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் கொடுவாய், ஈஸ்வரமூா்த்தி நகரைச் சோ்ந்த கிட்டுச்சாமி மகன் செல்வம் (51) தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில் அதிக குடிப்பழக்கத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண் பாா்வை குறைந்து பின்னா் முழுதும் பாா்வையில்லாமல் போனதாக கூறப்படுகிறது.
கண் பாா்வைக்காக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தாா். இருப்பினும் அது எதுவும் பலனளிக்காததால் கடந்த சில நாள்களாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசிபாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].