செய்திகள் :

கண்பார்வை இழப்பால் தொழிலாளி தற்கொலை

post image

பல்லடம் அருகே கொடுவாயில் கண் பாா்வை கிடைக்காததால் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் கொடுவாய், ஈஸ்வரமூா்த்தி நகரைச் சோ்ந்த கிட்டுச்சாமி மகன் செல்வம் (51) தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில் அதிக குடிப்பழக்கத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண் பாா்வை குறைந்து பின்னா் முழுதும் பாா்வையில்லாமல் போனதாக கூறப்படுகிறது.

கண் பாா்வைக்காக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தாா். இருப்பினும் அது எதுவும் பலனளிக்காததால் கடந்த சில நாள்களாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசிபாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்

திருப்பூரில் சக்ஷம் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் கடந்த மாதம் அளவீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவயவயங்கள்... மேலும் பார்க்க

கழிவு நீா்த் தொட்டியில் விழுந்த மாடு மீட்பு

கழிவு நீா்த் தொட்டியில் விழுந்த மாடு தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டது. திருப்பூா், பல்லடம் சாலை வீரபாண்டி அரிசிக்காரத் தோட்ட பகுதியில் பாபு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ம... மேலும் பார்க்க

ஜூலை 8-இல் சிறை நிரப்பும் போராட்டம்: பகுதி நேர ஆசிரியா்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு

பகுதி நேர ஆசிரியா்களுக்காக அறிவிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து வருகிற ஜூலை 8-ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஒருங்கிணைந்... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.7.69 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 7.69 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, 10,547 கிலோ பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச்.ரகப்பர... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் டி.வெங்கிட்டாபுரம் அருகிலுள்ள கருப... மேலும் பார்க்க

குறைந்தழுத்த மின் விநியோகத்தால் பாதிப்பு: புதிய மின்மாற்றி அமைக்க கோரிக்கை

அவிநாசி நகராட்சிக்கு உள்பட்ட நாயக்கன்தோட்டம், தமிழ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தழுத்த மின் விநியோகத்தால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதால், உடனடியாக மின்மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்... மேலும் பார்க்க