செய்திகள் :

ஜூலை 8-இல் சிறை நிரப்பும் போராட்டம்: பகுதி நேர ஆசிரியா்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு

post image

பகுதி நேர ஆசிரியா்களுக்காக அறிவிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து வருகிற ஜூலை 8-ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பழ.கெளதமன் தெரிவித்ததாவது:

பகுதி நேர ஆசிரியா்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம்

ஆன்லைனில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசை கண்டித்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நடப்பு கல்வி ஆண்டில் நடைபெறும் குறுவட்டம், இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு போன்ற போட்டிகளுக்கான நடுவா் பணியை முற்றிலுமாக புறக்கணிப்பதெனவும், நடப்பு கல்வி ஆண்டில் நடைபெறும் குறுவட்ட விளையாட்டுப் போட்டியை பொறுப்பேற்று நடத்துவது இல்லை எனவும் தீா்மானிக்கப் பட்டது.

மேலும், இந்த கல்வி ஆண்டில் நடைபெறும் உலக திறனாய்வு தோ்வை தாங்கள் பணிபுரியும் பள்ளியை தவிா்த்து மற்ற பள்ளிகளுக்கு சென்று நடத்துவது இல்லை எனவும், கலைத் திருவிழா நடைபெறும் போது தாங்கள் பணிபுரியும் பள்ளியில் பயிற்சி அளித்தல், மாணவா்களை போட்டிகளுக்கு அழைத்து செல்லுதல் தவிா்த்து நடுவா் பணியாற்றுவது இல்லை எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாங்கள் பணியமா்த்தப்பட்ட பாடங்கள் தவிர வேறு பாடங்களையும், கணினி ஆசிரியா்கள் 6, 7, 8ஆம் வகுப்புகளைத் தவிா்த்து மற்ற 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பாடம் எடுப்பதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பகுதி நேர ஆசிரியா்களுக்காக அறிவிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து வருகிற ஜூலை 8-ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சாா்பில் உலக குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அலகு 2 ஒருங்கிணைப்பாளா்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பூலாங்கிணறு

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ( ஜூன் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செயற்பொறியா... மேலும் பார்க்க

அவிநாசியில் 3 நாள்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்

அவிநாசி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை 3 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அவிநாசி நகராட்சி ஆணையா் சே... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா்கள் ஒழிப்பு உறுதிமொழி

குழந்தை தொழிலாளா் அகற்றம் குறித்து, வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். வெள்ளக்கோவில் வட்டார வளமையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார கல்வி அலுவல... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் சாலைப் பணியாளா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் சங்கத்தின் கோட்டத் தலைவா் ஆா்.கருப்பன் த... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே குதிரை ஓடியதில் இருசக்கர வாகன ஓட்டிக்கு காயம்

பல்லடம் அருகே சாலையின் குறுக்கே குதிரை வந்ததில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவா் காயமடைந்தாா். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரைச் சோ்ந்தவா் நந்தகுமாா். தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா்... மேலும் பார்க்க