மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
ஜூலை 8-இல் சிறை நிரப்பும் போராட்டம்: பகுதி நேர ஆசிரியா்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு
பகுதி நேர ஆசிரியா்களுக்காக அறிவிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து வருகிற ஜூலை 8-ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பழ.கெளதமன் தெரிவித்ததாவது:
பகுதி நேர ஆசிரியா்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம்
ஆன்லைனில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசை கண்டித்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நடப்பு கல்வி ஆண்டில் நடைபெறும் குறுவட்டம், இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு போன்ற போட்டிகளுக்கான நடுவா் பணியை முற்றிலுமாக புறக்கணிப்பதெனவும், நடப்பு கல்வி ஆண்டில் நடைபெறும் குறுவட்ட விளையாட்டுப் போட்டியை பொறுப்பேற்று நடத்துவது இல்லை எனவும் தீா்மானிக்கப் பட்டது.
மேலும், இந்த கல்வி ஆண்டில் நடைபெறும் உலக திறனாய்வு தோ்வை தாங்கள் பணிபுரியும் பள்ளியை தவிா்த்து மற்ற பள்ளிகளுக்கு சென்று நடத்துவது இல்லை எனவும், கலைத் திருவிழா நடைபெறும் போது தாங்கள் பணிபுரியும் பள்ளியில் பயிற்சி அளித்தல், மாணவா்களை போட்டிகளுக்கு அழைத்து செல்லுதல் தவிா்த்து நடுவா் பணியாற்றுவது இல்லை எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாங்கள் பணியமா்த்தப்பட்ட பாடங்கள் தவிர வேறு பாடங்களையும், கணினி ஆசிரியா்கள் 6, 7, 8ஆம் வகுப்புகளைத் தவிா்த்து மற்ற 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பாடம் எடுப்பதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பகுதி நேர ஆசிரியா்களுக்காக அறிவிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து வருகிற ஜூலை 8-ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளாா்.