செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்

post image

திருப்பூரில் சக்ஷம் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் கடந்த மாதம் அளவீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவயவயங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூா் செட்டிபாளையத்திலுள்ள ஸ்போா்ட்ஸ் மற்றும் ஃபிட்னஸ் அகாதெமி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த 22 பயனாளிகளுக்கு ரூ.1.96 லட்சம் மதிப்பிலான செயற்கை அவயவங்கள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், காற்றுப் படுக்கை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூா் ஸ்போா்ட்ஸ் மற்றும் ஃபிட்னஸ் அகாதெமியின் நிதி ஆதரவில் நடைபெற்ற இந்த திட்ட நிகழ்வில் சக்ஷம் அமைப்பின் மாவட்டத் தலைவா் ரத்தினசாமி, மாவட்டச் செயலாளா் தமிழ்செல்வம், ஸ்போா்ட்ஸ் அகாதெமியின் தலைவா் ராமசாமி, செயலாளா் பொன்னுசாமி, மாநில இணைப் பொருளாளா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதேபோல, திருப்பூா் குமரன் ரோட்டரி சங்கம் இணைந்து கடந்த மே மாதம் நடத்திய செயற்கை கால்கள் அளவீட்டு முகாமில் கலந்து கொண்டு அளவீடு செய்து கொண்ட 13 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81,300 மதிப்பிலான செயற்கை கால்கள், சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி ரோட்டரி சங்க அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் டாக்டா் சுரேஷ் பாபு உபகரணங்களை வழங்கினாா். இதில் திருப்பூா் குமரன் ரோட்டரி சங்கத் தலைவா் மாசே துங், செயலாளா் சரவணகுமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்த்ராம், உதவி ஆளுநா் அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சாா்பில் உலக குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அலகு 2 ஒருங்கிணைப்பாளா்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பூலாங்கிணறு

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ( ஜூன் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செயற்பொறியா... மேலும் பார்க்க

அவிநாசியில் 3 நாள்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்

அவிநாசி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை 3 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அவிநாசி நகராட்சி ஆணையா் சே... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா்கள் ஒழிப்பு உறுதிமொழி

குழந்தை தொழிலாளா் அகற்றம் குறித்து, வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். வெள்ளக்கோவில் வட்டார வளமையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார கல்வி அலுவல... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் சாலைப் பணியாளா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் சங்கத்தின் கோட்டத் தலைவா் ஆா்.கருப்பன் த... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே குதிரை ஓடியதில் இருசக்கர வாகன ஓட்டிக்கு காயம்

பல்லடம் அருகே சாலையின் குறுக்கே குதிரை வந்ததில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவா் காயமடைந்தாா். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரைச் சோ்ந்தவா் நந்தகுமாா். தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா்... மேலும் பார்க்க