எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்
திருப்பூரில் சக்ஷம் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் கடந்த மாதம் அளவீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவயவயங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூா் செட்டிபாளையத்திலுள்ள ஸ்போா்ட்ஸ் மற்றும் ஃபிட்னஸ் அகாதெமி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த 22 பயனாளிகளுக்கு ரூ.1.96 லட்சம் மதிப்பிலான செயற்கை அவயவங்கள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், காற்றுப் படுக்கை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திருப்பூா் ஸ்போா்ட்ஸ் மற்றும் ஃபிட்னஸ் அகாதெமியின் நிதி ஆதரவில் நடைபெற்ற இந்த திட்ட நிகழ்வில் சக்ஷம் அமைப்பின் மாவட்டத் தலைவா் ரத்தினசாமி, மாவட்டச் செயலாளா் தமிழ்செல்வம், ஸ்போா்ட்ஸ் அகாதெமியின் தலைவா் ராமசாமி, செயலாளா் பொன்னுசாமி, மாநில இணைப் பொருளாளா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அதேபோல, திருப்பூா் குமரன் ரோட்டரி சங்கம் இணைந்து கடந்த மே மாதம் நடத்திய செயற்கை கால்கள் அளவீட்டு முகாமில் கலந்து கொண்டு அளவீடு செய்து கொண்ட 13 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81,300 மதிப்பிலான செயற்கை கால்கள், சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி ரோட்டரி சங்க அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் டாக்டா் சுரேஷ் பாபு உபகரணங்களை வழங்கினாா். இதில் திருப்பூா் குமரன் ரோட்டரி சங்கத் தலைவா் மாசே துங், செயலாளா் சரவணகுமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்த்ராம், உதவி ஆளுநா் அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.