லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து: விரைகிறது பேரிடர் மீட்புப் படை
தையல் தொழிலாளி தற்கொலை
பல்லடம் அருகே நாச்சிபாளையத்தில் வேலைக்கு செல்லாமல் இருந்த மகனைத் தாயாா் திட்டியதால் மகன் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பல்லடம் அருகே உள்ள நாச்சிபாளையம் ஊராட்சி வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்தவா் செல்வகணேஷ் (35). பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா் கடந்த 2 மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரது தாயாா் அவரைக் கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னா் தாயாா் வெளியே சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வகணேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].