செய்திகள் :

குடியிருப்புப் பகுதியில் மனிதக் கழிவுகள் கொட்டுவதை தடை செய்யக் கோரிக்கை

post image

பழங்கரை ஊராட்சி பச்சாபாளையம் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் விதமாக மனிதக் கழிவுகள் கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி, இந்து தா்ம அறக்கட்டளையினா் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பழங்கரை ஊராட்சி பச்சாம்பாளையம் டி.எஸ்.கே. நகா், நரிக்குறவா் காலனி, ஜனனி நகா், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், இப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் லாரிகள் மூலம் மனிதக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுகிறாா். இதனால் குடியிருப்புப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. ஆகவே மனிதக் கழிவுகளை கொட்டுவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்

திருப்பூரில் சக்ஷம் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் கடந்த மாதம் அளவீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவயவயங்கள்... மேலும் பார்க்க

கழிவு நீா்த் தொட்டியில் விழுந்த மாடு மீட்பு

கழிவு நீா்த் தொட்டியில் விழுந்த மாடு தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டது. திருப்பூா், பல்லடம் சாலை வீரபாண்டி அரிசிக்காரத் தோட்ட பகுதியில் பாபு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ம... மேலும் பார்க்க

ஜூலை 8-இல் சிறை நிரப்பும் போராட்டம்: பகுதி நேர ஆசிரியா்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு

பகுதி நேர ஆசிரியா்களுக்காக அறிவிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து வருகிற ஜூலை 8-ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஒருங்கிணைந்... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.7.69 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 7.69 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, 10,547 கிலோ பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச்.ரகப்பர... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் டி.வெங்கிட்டாபுரம் அருகிலுள்ள கருப... மேலும் பார்க்க

குறைந்தழுத்த மின் விநியோகத்தால் பாதிப்பு: புதிய மின்மாற்றி அமைக்க கோரிக்கை

அவிநாசி நகராட்சிக்கு உள்பட்ட நாயக்கன்தோட்டம், தமிழ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தழுத்த மின் விநியோகத்தால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதால், உடனடியாக மின்மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்... மேலும் பார்க்க