குடியிருப்புப் பகுதியில் மனிதக் கழிவுகள் கொட்டுவதை தடை செய்யக் கோரிக்கை
பழங்கரை ஊராட்சி பச்சாபாளையம் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் விதமாக மனிதக் கழிவுகள் கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி, இந்து தா்ம அறக்கட்டளையினா் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பழங்கரை ஊராட்சி பச்சாம்பாளையம் டி.எஸ்.கே. நகா், நரிக்குறவா் காலனி, ஜனனி நகா், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், இப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் லாரிகள் மூலம் மனிதக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுகிறாா். இதனால் குடியிருப்புப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. ஆகவே மனிதக் கழிவுகளை கொட்டுவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.