செய்திகள் :

திருமணம் செய்துகொள்வதாகச் சிறுமி பாலியல் வன்கொடுமை: தில்லியில் அதிர்ச்சி!

post image

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி அமிலம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் ரெஹான். வசந்த் குஞ்ச் பகுதியில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்பு திருமணம் செய்துகொள்ளப் பின்வாங்கியுள்ளார். சிறுமியுடன் இருந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து மன உளைச்சலுக்குள்ளான சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, ஆசிட் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஜூன் 18ல் இந்த சம்பவம் நடைபெற்றது. சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஜூன் 20 ஆம் தேதி உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ரெஹான் திருமணம் செய்துகொள்வதாக தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து சிறுமியிடம் விசாரணை நடத்த போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்தனர். மேலும் தனது மகளின் மொபைல் போனையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும், அதில் குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் குரல் பதிவுகள் இருந்துள்ளது.

வசந்த் விஹாரின் துணைப்பிரிவு நீதிபதிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, மேலும் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய ஒரு தாசில்தார் நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, ஜூன் 25 அன்று வசந்த் குஞ்ச் (தெற்கு) காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ரங்புரி பஹாரியில் உள்ள சங்கர் முகாமில் வசிக்கும் ரெஹான் கைது செய்யப்பட்டார். 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், விமான நிலையத்தில் சுமை ஏற்றும் பணியாளராக பணியாற்றியுள்ளார். தற்போது அவர் வேலையில்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் விசாரணை நடந்து வருவதாக அவர் கூறினார்.

Summary

A girl attempted suicide by drinking acid in southwest Delhi's Vasant Kunj area after she was allegedly sexually assaulted by a man she was in a relationship with, police said on Wednesday.

எரிபொருள் தடை நடுத்தர வர்க்கத்தினர் மீதான தாக்குதல்: பாஜகவை சாடிய சிசோடியா!

பாஜக தலைமையிலான தில்லி அரசு நடுத்தர வர்க்கத்தினர் மீது தாக்குதல் நடத்திவருவதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினார். தலைநகரில் பயன்படு... மேலும் பார்க்க

குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: கனரா வங்கியைத் தொடர்ந்து மற்றொரு வங்கி!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை; அதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.ப... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார் சத்யேந்தர் ஜெயின்!

தில்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்துவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில் விசாரணைக்காகத் தில்லி முன்னாள் அமைச்சரும், ஆத் ஆத்மி தலைவருமான சத்யேந்தர் ஜெயின் அமலாக்கத்... மேலும் பார்க்க

தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?

மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட பிகார் பெண், தனது கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது.பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத... மேலும் பார்க்க

டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பாலியல் வன்கொடுமை! செல்ஃபி எடுத்து மிரட்டல்!

புணேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்து, இதுகுறித்து யாரிடமாவத... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை தொடக்கம்: புறப்பட்டது 2வது குழு!

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே அமர்நாத் யாத்திரை கோலகலமாக இன்று(ஜூலை 3) முதல் தொடங்கியுள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோ... மேலும் பார்க்க