செய்திகள் :

திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜஸ்வி சூர்யா!

post image

பெங்களூரு தெற்கு எம்பியும் பாஜக தேசிய இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா - தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் திருமண வரவேற்பு மார்ச் 9ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது.

ஞாயிற்றக்கிழமை காலை 11 மணிக்கு, பெங்களூருவில் உள்ள பாலஸ் கிரவுண்ட் என்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற திருமண வரவேற்புக்கு, தன்னுடைய எக்ஸ் பக்கம் வாயிலாக அனைவரையும் அழைத்திருந்தார் தேஜஸ்வி சூர்யா.

அனைவரையும் தன்னுடைய திருமண வரவேற்புக்கு அழைப்பதாக விடியோ வெளியிட்டிருந்த தேஜஸ்வி, ஒரே ஒரு கோரிக்கையும் வைத்திருந்தார். அதன்படி, தன்னுடைய திருமண வரவேற்புக்கு வருவோர் பரிசாக மலர்களையோ பழங்களையோ கொண்டு வர வேண்டாம் என்றும், திருமண நிகழ்ச்சிகளின்போது பல கிலோ எடையுள்ள மலர்கள் வீணாவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், திருமண வரவேற்பும் சிறப்பாகவே நடந்து முடிந்துள்ளது. மீண்டும் ஒரு பதிவை போட்டுள்ள தேஜஸ்வி சூர்யா, இந்த முறை விருந்தினர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அதில் தனது திருமண வரவேற்புக்கு வந்திருந்தவர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொண்டதோடு, பிறகு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். அதாவது, தனது அழைப்பை ஏற்று இத்தனை பேர் வருவார்கள் என்று தான் எண்ணவில்லை என்றும், விழாவுக்கு வந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வரிசையில் நின்று மேடைக்கு வந்து வாழ்த்தியமைக்கு நன்றியும், அதிக நேரம் காத்திருக்க நேரிட்டதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் கூறியுள்ளார்.

மராத்தியில் பேசுமாறு பஞ்சாயத்து அலுவலரைத் திட்டிய நபர் கைது!

கர்நாடக அரசு ஊழியரை மராத்தியில் பேசுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சினைக்க... மேலும் பார்க்க

ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் விதமாக பத்திரிகையாளர் வெளியிட்ட விடியோவை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளரும் யூடியுபருமான ஷ்யாம் மீரா சிங் த... மேலும் பார்க்க

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: தார்பாயால் மசூதிகளை மூட காவல்துறை உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 10 மசூதிகளை தார்பாயால் மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டி... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். லக்னௌவில் நடந்த மானி... மேலும் பார்க்க

தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?

தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எதிரான வழக்குகளை தில்லியின் புதிய பாஜக அரசு வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோ... மேலும் பார்க்க