மோடியும் ஷி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள்..! அமெரிக்க நிதியமைச்சர் கடும் தாக்கு!
திருமலையில் 79,310 போ் தரிசனம்
திருப்பதி: திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 70,310 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 21,880 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 70, 310 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 21, 880 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.49 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.