திருமலையில் 77,837 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 77,837 பக்தா்கள் தரிசித்தனா். 21,512 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 77,837 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 21,512 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.49 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.