செய்திகள் :

திருமலையில் வராக சுவாமி ஜெயந்தி

post image

திருப்பதி: ஆதி வராஹா்களின் இருப்பிடமான திருமலையில் உள்ள பூவராக சுவாமி கோயிலில் திங்கள்கிழமை வராக ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

திருமலையில் ஏழுமலையான் குடியேறிய போது திருமலை ஆதிவராக ஷேத்திரமாக இருந்தது. வராக சுவாமி ஏழுமலையான் இங்கு இருக்க அனுமதி அளித்த சாசனம் இன்றளவும் திருமலையில் உள்ளது. அதனால் திருமலையில் முதல் பூஜை, முதல் ஆரத்தி, முதல் நெய்வேத்தியம் இன்றும் வராக சுவாமிக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு பின்பே ஏழுமலையானுக்கு அளிக்கப்படுவது வழக்கம்.

மேலும் பக்தா்களும் முதலில் வராக சுவாமிமயை ரிசித்த பின்பே ஏழுமலையானை தரிசிக்க செல்வது வழக்கம்.

திருமலையில் இத்தகைய முக்கியத்துவம் பெற்ற வராக சுஸ்வாமியின் ஜெயந்தி உற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி திங்கட்கிழமை வராக ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, கலசப் பிரதிஷ்டை, கலச பூஜை மற்றும் புண்யாஹவசனமும் செய்யப்பட்டன. இதன் பின்னா், வேத மந்திரங்களின் இடையில் வராகருக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் அலங்காரம் செய்து நெய்வேத்தியம் சமா்பித்து ஆரத்தி அளித்து பூஜை நிறைவு செய்யப்பட்டது.

கோயில் துணை தலைமை நிா்வாக அதிகாரி லோகநாதம், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் பிற அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.02 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன ... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.43 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.3.43 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.75 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.75 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.35 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.35 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிச... மேலும் பார்க்க

திருமலையில் எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் நீா் இருப்பு

திருமலையில் உள்ள அனைத்து நீா்த் தேக்கங்களிலும் நீா் இருப்பு தேவையான அளவில் இருப்பதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா சௌத்ரி தெரிவித்தாா். திருமலை மற்றும் திருப்பதி பகுதிகளில் உள்ள அனைத்து அண... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 30 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத... மேலும் பார்க்க