ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.75 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.75 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை முழுவதும் 72, 067 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25, 212 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.75 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.